ஒளிப்பூக்கள்


முந்தா நாள் மழை பெய்தது. நேற்றிரவில் தெரு விளக்கு பூத்துக் குலுங்கியது. இன்று காலை கோழிகள் சில, விளக்குக் கம்பத்தினடியில் தரை கீறி கீறிக் கொத்திக்கொண்டு இருந்தன. பூனையொன்று அவைகளை விரட்டி மண்ணை முகர்ந்து பார்த்து நாக்கை நீட்டியது. 

அருகிலொரு மரத்தினடியில் சிந்திக்கிடந்த பன்னீர்ப் பூக்களோ, யாரும் சீந்துவாரில்லாமல் அப்படியே வட்டமாய்க் கிடந்தன. 


Comments

9 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நிறைய விசயங்களை எங்கள் கற்பனைக்கே விட்டு
    விட்டீர்கள். விளக்கு கம்பத்தின் கீழ் கோழிகள்
    உணவை (கீழ் கிடக்கும் ஈசல்களை) உண்ணும்
    போது, அவசர உலகில் குறைந்தபட்ச ரசனையை
    கூட இழந்த மனிதன் அந்த பூக்களை மிதிக்காமல்
    சென்றாலே, அதுவே நமக்கு ஆறுதலான விஷயம்

    ReplyDelete
  2. சந்தனமுல்லை!
    நன்றி.

    நாஞ்சில்நாதம்!
    மொத்தமாய் பதிவுகளை படித்து விட்டீர்கள் போலிருக்கிறது. நன்றி.


    முத்துக்குமார்!
    சொற்சித்திரத்துக்கு பொழிப்புரை, மதிப்புரை எல்லாம் எழுதிவிட்டீர்கள். மிக்க நன்றி.


    ஐந்திணை!
    அவ்வளவுதான்....:))))

    ReplyDelete
  3. எனக்கு புரியல (வருந்துகிறேன்)

    ReplyDelete
  4. சூப்பர்!

    @முத்துக்குமார்
    நன்றி. கலக்கீட்டீங்க!

    ReplyDelete
  5. தீபா!
    நன்றி.

    பாலரவிசங்கர்!
    காட்சிகளை ஒன்றொடொன்று கோர்த்துக்கொண்டு செல்லுங்கள் புரியும்.

    மங்களூர் சிவா!
    நன்றி.
    நீங்களே ஒருவரை கலக்குவதாகச் சொல்றீங்களா....!

    ReplyDelete

You can comment here