சொல்ல வேண்டும் போலிருக்கிறது - 18.6.2010


சென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன். பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது. அவனது கைகளை இறுகப் பற்றி இருந்தேன். “நாலைஞ்சு வருசத்துக்கு முன்னால எதோ தப்பு செஞ்சான்னு கையில் கிடைத்த கம்பையெடுத்து அடி அடின்னு அடிச்சுப்புட்டேன். அப்பா, அடிக்காதீங்கப்பா, அப்பா அடிக்காதீங்கப்பான்னு கதறினான் பிள்ளை. நான் அடிச்சுக்கிட்டே இருந்தேண்டா” எனச் சொல்லியபடி வாய்வெடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். நானும் அழுதேன். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும், மூலைமுடுக்கும் ரஞ்சித்தின் நினைவுகளை சுமந்து கொண்டுதானே இருக்கும்? அன்று முழுக்க அவனோடுதான் இருந்தேன். இரவில் விடைபெறும்போது, “அடிக்கடி பேசுடா” என்றான்.

யாரிடமும் எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்போது அதிகமாய்ப் பேசுவதில்லை . அவருக்கு விருப்பமாயிருந்த வஸ்துக்களையெல்லாம் துறந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. குழந்தை போலவும் தெரிகிறார். பெரும் ஞானியாகவும் தெரிகிறார். முன்னர் அவரோடு இருக்கும் நேரங்களில் அரசியல், இலக்கியம் எல்லாம் பேசுவார். இப்போது முகத்தில் புன்னகை தவழ, “ஊர்ல அப்பா, எப்படி இருக்காங்க”, “சாப்பிட்டீங்களா?” போன்ற விசாரிப்புகள் மட்டும் வருகின்றன. ஆச்சரியமாய் இருக்கிறது. கண்களில் வெப்பம் கொண்டு, பெருங்குரலெடுத்து பேசிய அவரா என்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. உட்கார்ந்து கொண்டிருப்பவர், சில சமயம் அப்படியே தலையில் கைவைத்து, கண்களை மூடிக்கொள்வார். எதோ கதை சொல்ல வருகிறார் போலத் தெரியும் அப்போது.

தீராத பக்கங்களில் எழுதி வந்திருந்த சொற்சித்திரங்களைத் தொகுத்து வம்சி புக்ஸ் வெளியிட்டு இருந்த ‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம் நாளை திருநெல்வேலியில், எழுத்தாளர் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. சிந்துபூந்துறையில் மூட்டா (மதுரை காமராஜ் பலகலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) அலுவலகக் கட்டிடத்தில் மாலை 6 மணிக்கு என திட்டமிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி போன்றவர்களோடு இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்டு புத்தகம் பற்றி பேசவிருக்கிறார் எழுத்தாளர் வண்ணதாசன். ஆவ்லோடு இருக்கிறேன்.

Comments

17 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. //
    சென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன். பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது. அவனது கைகளை இறுகப் பற்றி இருந்தேன். “நாலைஞ்சு வருசத்துக்கு முன்னால எதோ தப்பு செஞ்சான்னு கையில் கிடைத்த கம்பையெடுத்து அடி அடின்னு அடிச்சுப்புட்டேன். அப்பா, அடிக்காதீங்கப்பா, அப்பா அடிக்காதீங்கப்பான்னு கதறினான் பிள்ளை. நான் அடிச்சுக்கிட்டே இருந்தேண்டா” எனச் சொல்லியபடி வாய்வெடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். நானும் அழுதேன். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும், மூலைமுடுக்கும் ரஞ்சித்தின் நினைவுகளை சுமந்து கொண்டுதானே இருக்கும்? அன்று முழுக்க அவனோடுதான் இருந்தேன். இரவில் விடைபெறும்போது, “அடிக்கடி பேசுடா” என்றான்.
    //
    கண் கலங்க வைத்து விட்டீர்கள் தோழர்.

    ReplyDelete
  2. கவலையின் கலப்பில் இது ஒரு வகை... கைப்பேசி தான் ஆறுதல்...

    ReplyDelete
  3. /‘குருவிகள் பறந்துவிட்டன”/
    பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம் //
    வாழ்த்துகள் அங்கிள்!

    ReplyDelete
  5. //
    சென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன்.பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது.
    //
    இழப்பின் வலி பகிர தோழமை தவிர ஒரு உபாயமும் இல்லை.

    ReplyDelete
  6. தந்தை மகள் உறவு பற்றி எஸ் ராமகிருஷ்ணன் எழுதியதை ஞாபகப் படுத்தியது .

    All the best!!!

    ReplyDelete
  7. கலவையான உணர்வுகளை தந்தது இந்த இடுகை!

    மகளுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. இன்னதென்று அறுதியிட இயலாத மன நிலையை தருகிறது இந்த இடுகை மாது.

    இதற்குதான் ஆசைப் பட்டீங்கலான்னு தெரியல. :-)

    any how,

    மகளுக்கு என் வாழ்த்துகள்! மகனுக்கும்தான். அவசரம் வேணாம். எல்லாம் வரும்போது வரும் என நான் சொன்னதாக சொல்லுங்கள். :-)

    ஜெ, அருமையான இடம் நகர்ந்திருக்கிறார், என்று உணர தருகிறீர்கள்.

    நண்பர் அழகு வேலின் கைகளை நானும் பற்றிக் கொள்ளனும் போல வருது. அதே இறுக்கத்துடன்.

    புத்தக வெளியீடுக்கு வாழ்த்துகள், மாது!

    வண்ணதாசனை விசாரித்தேன் என சொல்லவும்.

    நினைவு இருந்தால்,

    "பா.ராஜாராமிற்கு 'போஸ்ட் கார்டில்' எழுதிய கடிதங்கள் நினைவு இருக்கா,கல்யாணி அண்ணாச்சி?"என்று நான் விசாரித்ததாக கேட்கவும்.

    இப்பின்னூட்டம் உங்களுக்கும் கலவையான மன நிலையை தரலாம்.

    தந்தால்,

    நீங்கள் எய்த இலக்கை தைத்திருக்கிறது, அம்பு! அல்லது அன்பு!

    ReplyDelete
  9. //இவள் எப்போதோ வரும் நாட்களை எதிர்பார்த்து இனி இந்த வீடு காத்திருக்கும்//

    சரியான வார்த்தைகள் மனதின் உணர்வுகளை எளிமையாக சொல்லியிருக்கிறாய் மாது!

    ReplyDelete
  10. 01)ப்பிரித்துவுக்கு வாழ்த்துக்கள்!!!

    02) ரஞ்சித்தின் நினைவுகள் மனதை கலஙக வைத்த்து!!!

    03)‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம்

    தஙகளுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. மகளுக்கு வாழ்த்துகள்

    அழகுவேலின் வலி புரிகிறது

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் மாதவ்; முதலுக்கும் கடைக்கும்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் தோழா.

    ReplyDelete
  14. This one post has all mixed feelings.

    Nice to know about your daughter's admission. I was also a ex-Loyolite. Congrats to her.

    Very sad to hear the feelings of Ranjan's parents. Time alone will heal the loss.

    I wish JK Sir bounce back to normal. Hope some Munnabai movie style will work on him.

    Thanks for sharing all.

    ReplyDelete
  15. \\எத்தனை எத்தனை பெற்றவர்கள், இதுபோன்ற உணர்வை ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு நாட்களை கழித்துக்கொண்டு இருப்பார்கள். குடும்பமாய் கூடிச் சிரித்து, சண்டைகளிட்டு வாழும் நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது இந்நாட்களில். \\
    சர்வ நிச்சயமான உண்மை தோழர்! அப்பா அமமாவோடு தொடர்ந்து ஒரு வாரம் தங்கியிருந்து வருடங்கள் பலவாகிவிட்டது. சம்பாதித்து ஒரு புன்னியமுமில்லை.

    ReplyDelete
  16. உங்கள் எங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்.
    இக்பால்

    ReplyDelete
  17. உங்கள் அன்பு மகளுக்கு நன்கு படிக்க நல்வாழ்த்துக்கள்.
    உங்கள் நண்பருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
    வணக்கம்.

    ReplyDelete

You can comment here