நீதிபதி அவரது அலுவல் அறையிலிருந்து கிளம்பி விட்டார். பியூன் மின்விசிறி, விளக்குகள் என ஒவ்வொன்றாய் அணைத்தார். ஜன்னல்களைப் சாத்திக்கொண்டு வந்தார். ஒரு பீரோவின் மேலிருந்து சடசடவென இறக்கைகளை விசிறியபடி குருவி சுவற்றில் மோதியது. எப்படி, எப்போது உள்ளே வந்தது எனத் தெரியவில்லை. “ச்சூ...ச்சூ” என விரட்டினார். குருவி அறைக்குள்ளேயே அங்குமிங்குமாய் பறந்தது. கேஸ்கட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்த மேஜையில் உட்கார்ந்தது. திரும்பவும் மேலே பறந்தது. அந்தரத்தில் அங்குமிங்கும் போய்ப் பார்த்து மின்விசிறி இறக்கையில் உட்கார்ந்து கொண்டது. ஜன்னல்களையெல்லாம் திறந்து வைத்து பியூன் திரும்பவும் விரட்டினார். வெளிச்சம் பரவிய அந்த அறைக்குள்ளேயே சுவற்றில் மோதி மோதிக் கொண்டு இருந்தது. பரிதாபமாய் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குருவி பின்னாலேயேச் சென்று விரட்டிக்கொண்டு இருந்தார். இருட்டிவிட்ட வெளியுலகம் அதன் கண்களுக்கு தெரியவில்லை போலும். காலையில் வெளிச்சம் வந்தபிறகு வெளியே சென்றுவிடும் என சமாதானப்படுத்திக்கொண்டு பியூன் மீண்டும் ஜன்னல்களைச் சாத்தினார். விளக்குகளை அணைத்தார்.
அடுத்த நாள் காலையில், புகழ்பெற்ற அந்த உயர்நீதிமன்ற நீதிபதி குளித்து, நெற்றியெல்லாம் விபூதி பூசி, கிழே இறங்கிச் சென்று தன் அலுவலகத்தைத் திறந்தார். மின்விசிறி சுவிட்சைப் போட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். அன்று சொல்ல வேண்டிய தீர்ப்பு ஒன்றிற்காக ஏற்கனவே சொல்லப்பட்ட தீர்ப்புகள் அடங்கிய பெரிய புத்தகம் ஒன்றை எடுத்து விரித்தார். சத்தென்று ஒரு மெலிய சத்தம் கேட்டது. என்னது என யோசிப்பதற்குள் அந்த புத்தகத்தில் இரத்தக் கீறல்களோடு ஒரு குருவி விழுந்தது.
“அட கடவுளே!”
:-((
ReplyDeleteஅவ்வ்வ்! அது நடந்துவிடக்கூடாதென்று நினைத்துக் கொண்டே படித்தேன்...நடந்துவிட்டது!! ஹ்ம்ம்ம்...!:(
ReplyDeleteஅடக் கடவுளே!!!!
ReplyDeleteஅட கடவுளே!
ReplyDeleteஏன் கடவுளே?
ReplyDeleteஅட கடவுளே :(
ReplyDeleteada kadavulaa....?
ReplyDeletemadhu anna...
mudiyala...........
:(
ReplyDelete:(
ReplyDeleteஇதப்படிச்சது ரொம்ப நாளுக்கு நினைவிலிருக்கும். அதுதான் இதோட மகத்துவம். நான்கூட ஒருமுறை தெரியாம எக்சாஸ்ட் ஃபேன் போட்டு ஒரு புறா செத்து, இன்னிக்கும் உறுத்துது.
ReplyDeleteதீபா!
ReplyDeleteசந்தனமுல்லை!
நானும் நடக்கக் கூடாதென்றுதான் நினைத்தேன்.
கதிர்!
ஆ.முத்துராமலிங்கம்!
பிரியமுடன் வசந்த்!
சின்ன அம்மிணி!
இலக்கியா!
பட்டம்பூச்சி!
மங்களூர் சிவா!
முத்துவேல்!
அனைவரின் வருகைக்கும், உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கும் நன்றி.