மின்சாரம் சுருட்டிய பறவைகள்

Picture 14628 copy

 

 

குழந்தைகளின் சத்தங்களால்
தெருவே
நிறைந்து ததும்பியது

 

அப்போதுதான் பூத்ததாய்
மங்கிய நிலவின் வெளிச்சம்

 

ஒளிந்து விளையாடினார்கள்
ரெயில் ஓட்டினார்கள்
யாரோ சத்தம் போட
வீடு கட்ட
கொட்டிக் கிடந்த மணலில்
குதித்துக் கிடந்தவர்கள்
'ஹோவென்று' கலைந்தார்கள்
அங்கொரு வேப்ப மரத்தடியில்
மீண்டும் சேர்ந்தார்கள்

 

பளிரென தெருவும்
வீடுகளும் விழித்துக் கொண்டன

 

சட்டென குழந்தைகள்
மாயமாகிப் போனார்கள்

 

சோடியம் விளக்கு
அனாதையான தெருவின் மீது
தனியாய் சிரித்துக் கொண்டிருந்தது.

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சோடியம் விளக்கு
    அனாதையான தெருவின் மீது
    தனியாய் சிரித்துக் கொண்டிருந்தது^)நீங்கள் எழுதிய கவிதையில் இந்த வரி என்னை கவர்ந்து உள்ளது.இது அல்லவா கவிதை

    பதிலளிநீக்கு
  2. கஜன்ஸ்!

    மீண்டும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதையும் அதற்குப் பொருத்தமான தலைப்புமாக அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க வடகரை வேலன்!

    கொஞ்ச நாளாய் பார்க்கலையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சுருங்கச் சொல்லி விளங்கப்பண்ணும்
    நகர நடப்பு அருமை மாது

    பதிலளிநீக்கு
  6. \\சோடியம் விளக்கு
    அனாதையான தெருவின் மீது
    தனியாய் சிரித்துக் கொண்டிருந்தது.\\

    அழகான சிரிப்பு (சிந்திப்பு) ...

    பதிலளிநீக்கு
  7. காமராஜ்!

    நட்புடன் ஜமால்!

    இருவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நகரீயமயமாதலின் அழித்தொழிப்பு சரியாய் வந்திருக்கிறது..
    நன்று..

    பதிலளிநீக்கு
  9. வாங்க அய்யனார்!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இயற்கையை வென்ற செயற்கை! செயற்கை யாவும் சூழ் நிலையை ஒத்து இருப்பதில்லை; செயற்கையில், இயற்கைகள் கரைந்து போகின்றன. நல்ல எண்ண ஓட்டம்.

    பதிலளிநீக்கு
  11. சந்தர்!

    உங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!