-----------
“5 மணி வரை இருப்பேன். அதன்பின் ஒரு நிமிடம் கூட நான் இங்கு இருக்க மாட்டேன்.”
மேலாளர் கதிர்வேலுவிடம் தெளிவாகச் சொல்லி விட்டேன். கொரோனா முகக் கவசம் அணிந்திருந்த அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அப்போது நேரம் மாலை 4.25. நாள் 30.4.2021.
முப்பத்தேழு வருடங்களும், 5 மாதங்களும் பணிபுரிந்த தமிழ்நாடு கிராம வங்கியில் (2019 மார்ச் மாதம் வரை பாண்டியன் கிராம வங்கி) இருந்து ஓய்வு பெற மேலும் 35 நிமிடங்கள் இருந்தது.
சாத்தூர் தலைமையலுவலகம், பூச்சிக்காடு, சாத்தூர் கிளை, விருதுநகர், சங்கரலிங்கபுரம், திருத்தங்கல், சாத்தூர், சூலக்கரை மேடு கிளைகளில் பணிபுரிந்திருந்தேன். தொழிற்சங்கப் பணியின் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்த 600 கிளைகளில் 500க்கும் மேற்பட்ட கிளைகளுக்கு சென்றிருந்தேன். கடைசியாக சேலத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கி.மீ தொலைவில் இருக்கும் மின்னம்பள்ளி என்னும் அந்த சிறிய ஊரின் கிளையில் அமர்ந்திருந்தேன்.
1983, டிசம்பர் 1ம் தேதி, எனது 22ம் வயதில் இந்த வங்கியில் பணிக்குச் சேர்ந்தேன். வாழ்வின் பெரும்பகுதி இந்த வங்கியோடுதான். கூட்டங்கள், போராட்டங்கள், பயணங்கள் என காலமெல்லாம் தோழர்களோடும், வங்கியின் ஊழியர்களோடும் இருந்த நினைவுகள் அலைமோதிக் கொண்டு இருந்தன. தொழிற்சங்கப் பணிகளும் அதுகுறித்த சிந்தனைகளும், செயல்களுமாய் நிறைந்த அனுபவங்களால் நெஞ்சு விம்மிக் கிடந்தது.
அந்தக் கிளையில் தோழர்கள் அறிவுடைநம்பி, பத்மநாபன் அண்டோ கால்பர்ட், அஸ்வத், பரிதிராஜா, சங்கர், லஷ்மி நாராயணன், தங்க மாரியப்பன், பத்மநாபன், வினோத், ராஜராஜன் இன்னும் சில தோழர்கள் என்னோடு இருந்தார்கள். பா.கிருஷ்ணகுமார், சோலை மாணிக்கம், போன்ற தோழர்களோடு சாத்தூரில் ஆரம்பித்த பயணம் அது. விருதுநகர் வழியாக வந்து சேலத்தில் இளம் தோழர்களோடு தொடர்ந்திருந்தது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து கொண்டிருந்தது.
மேலாளர் கதிர்வேல் கிளையில் இருந்த போனில் யாரிடமோ பேசினார். பின்னர் மொபைலை எடுத்து வெளியே போய் பேசி வந்தார். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
கிளையில் இறுக்கமும் தவிப்பும் அப்போது நிறைந்திருந்தது இவ்வளவு காலமும் சங்கத்துக்காக உழைத்த தங்கள் அன்புக்குரிய தோழர் மாதவராஜை நல்ல முறையில் வழியனுப்ப இயலாதோ என்னும் வருத்தமும், கோபமும் அவர்களிடம் தெரிந்தது. ’அமைதியா இருங்க. நிதானமா இருங்க’ காலையிலிருந்தே சொல்லியிருந்தேன்.
”ஒரு தடவை நிர்வாகத்துடன் பேசிப் பார்ப்போம்” என்று ஆண்டோ சொல்லிப் பார்த்தான். வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டேன். எந்தத் தவறும் செய்யாதபோது நாம் எதற்கு இறங்கிப் போக வேண்டும் என்பதே என் கருத்தாக இருந்தது. தோழர் சோலைமாணிக்கம் என் மீது கொண்ட அக்கறையினாலும் அன்பினாலும் தனக்குத் தெரிந்த சில உயரதிகாரிகளோடு பேசியதாகச் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. சம்மதமும் இல்லை. ’எது நடந்தாலும் என்னிடம்தானே வந்து முடிய வேண்டும். பார்த்துக் கொள்ளலாம்” என்பதில் உறுதியாக இருந்தேன்.
2021 மார்ச் மாதம் 10ம் தேதி, எனக்கும் அறிவுடைநம்பி, அஸ்வத், தங்கமாரியப்பன், லஷ்மி நாராயணன், சங்கர் ஆகிய ஆறு தோழர்களுக்கும், நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதங்கள் (Explanation Letters) வந்தன. ஓய்வு பெற்ற தோழர்கள் சோலைமாணிக்கத்திற்கும், கிருஷ்ணனுக்கும் ஏன் உங்கள் பென்ஷனை நிறுத்தக்கூடாது எனவும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அப்போதே நிர்வாகத்தின் நோக்கத்தையும் தீவீரத்தையும் ஒரளவுக்கு ஊகித்திருந்தோம்.
2021 மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்றவர்கள் சங்கம் (TNGBRS) நடத்திய தர்ணாவின் போது நாங்கள் ஆறு பேரும் தலைமையலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், சேர்மன் (அப்போதைய சேர்மன் மிஸ்டர் செல்வராஜ்) கேபினுக்குள் ஒழுக்கமில்லாமல் கதவைத் திறந்து கொண்டு சென்றதாகவும், பின் சேர்மனையும் தலைமையலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களையும் வழிமறித்ததாகவும் , சத்தம் போட்டு வன்முறையாக நடந்து கொண்டதாகவும் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அத்தனையும் ஜோடிக்கப்பட்டது. சங்கத்திலிருந்து 1.3.2021 அன்றே நடந்த விஷயங்களை TNGBOA பொதுச்செயலாளர் தோழர் அறிவுடை நம்பியும், TNGWU பொதுச்செயலாளர் அஸ்வத்தும் வாட்ஸ்-அப்பில் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.
நடந்ததே வேறு.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டு வந்த பிரிமியத் தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்தும், பணி ஓய்வு பெற்று இறந்து போன ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டிய பென்ஷன் காலதாமதம் ஆவதை சுட்டிக் காட்டியும் TNGBRS சங்கத்திலிருந்து 1.3.2021 அன்று சேலத்தில் தர்ணா நடத்தினார்கள். போராட்டத்தை வாழ்த்தி, தார்மீக ஆதரவு கொடுப்பதற்காக TNGBOA-விலிருந்தும் TNGWU-விலிருந்தும் தோழர்கள் மாதவராஜ், அஸ்வத்,பரிதிராஜா, தங்க மாரியப்பன், சங்கர், லட்சுமி நாராயணன், அறிவுடை நம்பி, பத்மநாபன்,அண்டோ கால்பர்ட் ஆகியோர் சென்றிருந்தோம். கொரோனா நேரம் என்பதால் காவல்துறையிலிருந்து வந்த போலீஸார் மதியம் 1 மணிக்குள் தர்ணாவை முடிக்குமாறு வலியுறுத்தினார்கள். எனவே TNGBRS சங்கத்திலிருந்து சேர்மனைப் பார்த்து மனு கொடுப்பதற்காக தோழர்கள் சோலைமாணிக்கம், புளுகாண்டி, கிருஷ்ணன், சுப்பாராமன் ஆகியோர் சென்றனர். மெமொரெண்டத்தை வாங்கிய சேர்மன் அதை மேஜையில் தூக்கி எறிந்து விட்டு, அவரது அறையின் விளக்கை அணைத்தபடி வெளியே வந்திருக்கிறார். உள்ளே சென்றவர்கள் “ஏன் சார் இவ்வளவு அநாகரிகமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்கிறீர்கள்” என கேட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அங்கு வாக்கு வாதம் நடந்தது. கேள்விப்பட்ட நான் அதன் பிறகு உள்ளே சென்று சமாதானம் செய்து தோழர்களை வெளியே அழைத்து வந்தேன்.
சங்கத் தரப்பில் எங்கள் மீது ஒரு தவறும், குற்றமும் கிடையாது. முறையற்று நடந்து கொண்டது முழுக்க சேர்மன் மிஸ்டர் செல்வராஜ். நடந்ததையெல்லாம் மறைத்து விட்டு, சங்கத் தலைவர்கள் மீது விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது நிர்வாகம். குற்றச்சாட்டை மறுத்து உரிய பதில்களை சம்பந்தப்பட்ட தோழர்கள் அனுப்பினர். அந்த பதில்களை மறுத்து நிர்வாகம் மார்ச் 30ம் தேதி சார்ஜ் ஷீட் கொடுத்தது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருந்தது.
ஆறு பேரில் என்னைத் தவிர எல்லோருமே இளம் தோழர்கள். எனக்கு ஓய்வு பெற சரியாக ஒரு மாதமே இருந்தது. அதைக் குறி வைத்துத்தான் எனக்கு சார்ஜ் ஷீட் நம்பர் 42/2021ஐக் கொடுத்திருந்தது. சார்ஜ் ஷீட் இருக்கும்போது 30.4.2021 அன்று எனக்கு நிர்வாகம் பணி ஓய்வை நிறுத்தி வைப்பதாக (cessation of service) கடிதம் கொடுத்தது என்றால், எனக்கு ஓய்வு காலச் சலுகைகள் நிறுத்தப்படும். எனவே தோழர் மாதவராஜ்க்காக சங்கம் தன்னிடம் இறங்கி வரும் என்பதுதான் சேர்மன் மிஸ்டர் செல்வராஜின் திட்டமும் நோக்கமும்.
அந்த 30.4.2021ல்தான் நாங்கள் அனைவரும் கிளையில் இருந்தோம்.
மணி சரியாக 5-ஐத் தொட்டது.
பல போராடடங்கள்... முதலில் தோல்வி... இறுதியில் வெற்றி!!! அறியும் போது மகிழச்சி! !!
ReplyDeleteமீண்டும் மீண்டும் தொடர்ந்து போராடினால் தோல்வி இருப்பதில்லை, பொன்ராஜ்!
Deleteபொன்ராஜ்January 20, 2025 at 10:56 PM
ReplyDeleteபல போராட்டங்கள்... முதலில் தோல்வி... இறுதியில் வெற்றி!!! அறியும் போது மகிழச்சி! !!
இறுதி வெற்றி நமதே
ReplyDelete//இறுதி வெற்றி நமதே// ஆமாம் தோழரே.தோழரே, நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டில் கருத்து செய்தால் தாங்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியும். இல்லையென்றால், கருத்துரைக்கும்போது தங்கள் பெயரையாவது குறிப்பிடலாமே. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Delete100% உண்மை
Deleteஅதிகார வர்க்கத்தின் ஆணவம்
ReplyDeleteதகரும்....
தொழிலாளிகளின் ஒற்றுமை வெல்லும்...
//அதிகார வர்க்கத்தின் ஆணவம்
Deleteதகரும்....
தொழிலாளிகளின் ஒற்றுமை வெல்லும்..// .நிச்சயம் வெல்லும். தோழரே, நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டில் கருத்து செய்தால் தாங்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியும். இல்லையென்றால், கருத்துரைக்கும்போது தங்கள் பெயரையாவது குறிப்பிடலாமே. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ரத்தம் விக்கும் போராட்டத்தைத் -போராடிய எங்களுக்கு அறிமுகபடுத்திய முதல்வனே- உங்களை பதம் பார்த்த பாண்டியன் கிராம நிர்வாக உண்மையே உரக்க உங்கள் மொழியில் பேசட்டும் அடுத்த தலைமுறை போராட பயிற்சி பெறட்டும் நானும் தான்
ReplyDeleteமு.மாரிமுத்து
அருமைத் தோழர் மாரிமுத்து வாருங்கள். ஒரு அரசையே அதிரச் செய்த ‘சாலைப் பணியாளர்களின் போராட்டங்களுக்கு’ தலைமை தாங்கியவர் நீங்கள். உங்கள் போராட்டங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறோம். அந்த அனுபவங்களாலும் வார்க்கப்பட்டு இருக்கிறோம். வருகைக்கும், நல்ல வாழ்த்துக்கும் நன்றி தோழர்.
Deleteஅன்பு தோழர் மாதவராஜ் க்கு புரட்சிகர வணக்கம் தொடர்ந்து அனுபவங்களை எழுதுங்கள் தொழிலாளி வர்க்கம் தோற்றதாக சரித்திரம் இல்லை வாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteநல்லது தோழர். தொடர்ந்து எழுதுவேன். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்ரி. (தாங்கள் யாரென்று தெரியவில்லையே!)
Deleteஉங்களைப்போன்ற தோழர்களின் தொடர் போராட்டம் தான் என்னைப்போன்றவர்களுக்கு தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுக்கின்றது தோழர் ....புரட்சிகர வாழ்த்துகள் தோழர்...
ReplyDeleteநல்லது தோழர் ராஜா!. தொழிற்சங்கம் ஒரு இயக்கமாக பரிணமிக்கும்போது இயல்பாக போர்க்குணத்தை தனிமனிதர்கள் பெறுகிறார்கள். அப்படி ஒரு இயக்கமே மிக முக்கியமானது. நம்பிக்கையளிப்பது. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteமிகச் சிறப்பான முன் முயற்சி. முதல் அத்தியாயமே விறுவிறுப்பாக மிகவும் சுவாரசியமாக உள்ளது. பல பேர் செயற்கையாக நம்பிக்கை தொடர் என்று சிலரின் வாழ்க்கையை முன்னிறுத்தி "நீங்களும் தொழில் அதிபராக ஆகலாம்" என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள். இது ஓர் உண்மையான போராட்ட வெற்றி வரலாறு. இதை தங்களைப் போன்ற எழுத்தாளர்கள் தான் ஒரு புதினம் போல் எழுதி அடுத்த தலைமுறையினருக்கு போராட்டத்தில் பெரும் நம்பிக்கையை ஊட்ட முடியும். மிகச் சிறப்பான துவக்கம். தொடருங்கள் தோழர்.
ReplyDeleteதோழர் சி.பி.கே! உங்கள் வார்த்தைகள் நம்பிக்கையளிக்கின்றன. உற்சாகம் தருகின்றன. சுவாரசியத்தோடு சொல்ல முயல்கிறேன். தங்களுக்கு என் அன்பும், மகிழ்ச்சியும்!
Deleteதங்கள் போராட்ட வெற்றியின் இரண்டு அத்தியாயங்கள் சிறப்பாக வந்துள்ளன. பாங்க் வொர்க்கர்ஸ் யுனிட்டி இல் "இருட்டிலிருந்து" தொடரை மாதம் தோறும் ஆவலுடன் வாசிப்பேன். இந்த தொடர் ஒரு சவாலான கால கட்டத்தின் போராட்ட வரலாறு. அதை பதிவு செய்வவது மிக அவசியமான பணி. அதை மேற்கொண்டதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்...தொடர் விறுவிறுப்பாக உள்ளது.
ReplyDeleteAnonymousJanuary 23, 2025 at 8:52 AM
ReplyDeleteதங்கள் போராட்ட வெற்றியின் இரண்டு அத்தியாயங்கள் சிறப்பாக வந்துள்ளன. பாங்க் வொர்க்கர்ஸ் யுனிட்டி இல் "இருட்டிலிருந்து" தொடரை மாதம் தோறும் ஆவலுடன் வாசிப்பேன். இந்த தொடர் ஒரு சவாலான கால கட்டத்தின் போராட்ட வரலாறு. அதை பதிவு செய்வவது மிக அவசியமான பணி. அதை மேற்கொண்டதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்...தொடர் விறுவிறுப்பாக உள்ளது. இளம் தோழர்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.
அன்புடன்,ஹரிராவ்.
இந்தப் போராட்டத்தில் எங்களோடு இருந்தவர்க்ள் நீங்கள். தங்கள் வருகைக்கு அன்பும் நன்றியும் தோழர் ஹரிராவ்.இளம் தோழர்களுக்கு சொல்வதற்காகத்தன் இந்தத் தொடர். தொடர்வோம்.
Deleteபோராட்ட கதைகளை படித்து மட்டும் அறிந்திருந்த எங்களுக்கு, அந்த போராட்டங்களுக்கு தலைமை ஏற்று முன்னிற்கும் அனுபவத்தை பெற்ற நிகழ்வு இது இதை வாசிக்கும் போது கடந்த காலம் கண் முன் விரிகிறது. அன்றைய நாளில் தான் எத்தனை விதமான மனவோட்டங்கள்!!!
ReplyDeleteஆம் தோழா.... அந்த நாள் அதற்கு முன்னும் பின்னுமாய் நிறைய பின்னாணிகளையும் அதிர்வுகளையும் கொண்ட நாள். நம் கடந்த காலம், எதிர்காலத்துக்கும் தெரிய வேண்டும்.
Delete