கருப்பின் குரலொன்று!

 

black and white

 

நான்
பிறக்கும்போது கருப்பு
வளர்ந்தபோது கருப்பு
வெயிலில் நடந்தபோது கருப்பு
குளிரில் உறைந்தபோது கருப்பு
வெறித்து நின்ற போது கருப்பு
உடல்நலம் குன்றியபோது கருப்பு
இறந்த போதும் கருப்பு

 

நீயோ
பிறப்பில்  இளஞ்சிவப்பு
வளர்ந்ததில் வெள்ளை
வெயிலில் சிவப்பு
குளிரில் நீலம்
வெறிப்பில் மஞ்சள்
உடல்நலம் குன்றியதில் பச்சை
இறப்பிலோ சாம்பல்

 

இந்த நீதான்
என்னை  நிற பேதம் கொண்டவனாய் பார்க்கிறாய்?

 

(ஒரு கருப்பினக் குழந்தையின் இக்கவிதையை  புதிய ஆசிரியன் பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் மொழியாக்கம்)


கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இதற்கு முன் எங்கேயோ படித்ததாய் ஞாபகம்
    அருமை பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. குழந்தையின் ஏக்கப் பார்வையே கவிதையின் வலியை உணர்த்தி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  3. Forward Mailல் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன். தமிழிலும் அற்புதம் :)

    பதிலளிநீக்கு
  4. real one:

    When I born, I black
    When I grow up, I black
    When I go in Sun, I black
    When I scared, I black
    When I sick, I black
    And when I die, I still black

    And you white fellow
    When you born, you pink
    When you grow up, you white
    When you go in sun, you red
    When you cold, you blue
    When you scared, you yellow
    When you sick, you green
    And when you die, you gray

    And you calling me colored??

    this is better when u read it in English..

    பதிலளிநீக்கு
  5. க"று"ப்பு தானே நிறத்திற்கு.

    பதிலளிநீக்கு
  6. உக்கிரமாய் ஒலிக்கிறது கருப்பின் குரல். அந்த இறுதி வரிகளும், படமும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி மாது அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. Dear Mathavaraj,

    thayavu seythu manniththu vidungal... tamil font illai ennidam.

    karuppina kuzhandhaikal endru solvadhu ingu migapperiya thavaru... africa kuzhanthaikal endru solkiraarkal... colored... enbadhu inge avamathikkum oru sol.
    kavithai abaaram... africa kuzhanthaikal maha azhagu mathavaraj... avarkalin kankal... kannam... minukku thol... karuppu minnal keetrukal.

    anbudan
    ragavan

    பதிலளிநீக்கு
  8. தம்பி கூர்மதியன்!
    மிக்க நன்றி.

    தர்ஷன்!
    நான் இப்போதுதான் புதிஉய ஆசிரியன் எனும் பத்திரிகையில் பார்த்தேன்.

    அம்பிகா!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    நிலாரசிகன்!
    மிக்க நன்ரி தம்பி.


    வெண்காட்டான்!
    இந்தக் கவிதையைத்தான் இங்கே மொழியாக்கம் செய்யத் துணிந்தேன். நீங்கள் சொல்வது போல, ஆங்கிலத்தில், இன்னும் அடர்த்தியும், ஆழமும் இருக்கிறது.


    கையேடு!
    நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பலரும் இப்படி எழுதுகிறார்கள். நன்றி.


    செ.சரவணக்குமார்!
    மிக்க நன்றி தம்பி.


    ராகவன்!
    நீங்கள் எப்படி எழுதினாலும் சந்தோஷமே. ‘colored' என்னும் வார்த்தைக்கு நீங்கள் சொன்ன விளக்கமே உண்மை. அதைத் தமிழாக்கம் செய்வது எப்படி? கவிதையின் தொனி மாறுகிறது, இல்லையா?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!