எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை!

enthiran-01 உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ‘ஷங்கர்’ என்று சொல்வேன். அப்படியொரு திடமான நம்பிக்கையை அவர் குறித்து அவரே எழுப்பி இருக்கிறார். நமது நிறத்தின், பண்பாட்டின், அடையாளங்களின், விழுமியங்களின், மகத்துவங்களின் மீது அப்படியொரு வன்மமும், துவேஷமும் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து இருக்கிறது.

மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறது.

அபூர்வ ராகங்களில் துளிர்த்து, முள்ளும் மலரில் வளர்ந்த ரஜினிகாந்த் என்னும் நடிகர், தான் வந்த பாதையை மறந்து இன்று திசைமாறி எங்கோ போய்விட்டார். தன்  ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் அவரிடம் இப்போது தென்படவில்லை.

இளையராஜாவுக்கு எதிராக அல்லது மாற்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், தன் திறமையின் மூலம் இசையுலகில் தனக்கென்று அல்லது தனக்குரிய ஒரு இடத்தை அடைந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். நல்ல படங்கள் என்றால், தன் சன்மானத்தை பொருட்படுத்தாமல் இசையமைக்கும் இளையராஜா போன்றோரின் முன்னால், பெரும் நிறுவனங்களின் பேனர்களில் மட்டுமே தன் இசையை வெளிக்காட்டும் ஏ.ஆர்.ரகுமானின் ‘சர்வதேசக் கலைத்தாகம்’ யாருக்கானது எனச் சொல்லத் தேவையில்லை.

இந்த தில்லாலங்கடிகளின் கூட்டுத் தொழிலில் (உழைப்பில் என்று சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்), உருவாக்கிய சினிமாவான எந்திரன் குறித்து எகிறி எகிறிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான்  தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.

endhiran-finish-shooting-05 “இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது.

“இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன்” என்று அதிரடியாய் அறிவிக்கிறார்கள். என்னா தெனாவெட்டு! “சயின்ஸ்னா என்ன? ஃபிக்‌ஷன் என்ன?” என்று யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற தைரியம்தானே இப்படியெல்லாம் பேச வைக்கிறது. “வித்தியாசமான ரஜினியை பார்க்கப் போகிறீர்கள்” என்று நெஞ்சு விம்மிப் போகிறார் ஷங்கர். தமிழ்ச்சினிமா ரசிகர்களை இந்த ‘வித்தியாசம்’ எனும் வார்த்தை சொல்லி எத்தனை காலம், எத்தனை பேர், எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை ஏமாந்தபோதும், திரும்பவும் ஏமாறத் தயாராய் இருக்கிறார்கள் என்னும் கொழுப்பில்தானே இப்படியெல்லாம் பேச முடிகிறது.

பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கதைக்கிறவர்களுக்கும், வித்தியாசம் என மார்தட்டுபவர்களுக்கும் நடிகர் விவேக் பேசியதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ”ஆமையும் முயலும் கதையினை ஷங்கர் எடுக்க வேண்டும். அதனை ஜெர்மனியில் உள்ள பெரும் மைதானத்தை வாடகை எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ படம் எடுக்க வேண்டும். மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும்” என்று அவர் நகைச்சுவையாக பேசியதில் உண்மைகளும் இருக்கின்றன.

எந்திரன் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பெரிய கேக் வெட்டி விழா. அதுகுறித்துச் செய்திகள். அப்புறம் அதன் பாடல்கள் வெளியீட்டு விழா. அது குறித்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள். அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது?

“ஜஸ்ட் 150 கோடி செலவு செய்து..” என்று பெருமிதமாய்ப் பேசுகிறார் ரஜினிகாந்த். நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று அறியாத பெரும் கூட்டம் அதைக்கேட்டு இறுமாந்து போகிறது. இந்த “ஜஸ்ட்டில்” என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது. காசு கொடுத்துப் பார்க்கிற யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு படம் எடுத்து, அதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இந்த வியாபார உத்திகளின் மீது நமது கோபத்தைக் காட்டாமல், வேடிக்கைப் பார்க்கிற அல்லது ரசிக்கிற மனோபாவமே சமூகக் கேடு. அதைத் தகர்க்கிற மூர்க்கம் பொறுப்புள்ள பிரஜைக்கு வந்தாக வேண்டும்.

எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள்.  யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’  வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல!  பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.

சினிமா என்பது  இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போடு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர்களை களங்கப்படுத்துவதோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் ’எந்திரன்’கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

”இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கான சினிமா!”

கருத்துகள்

102 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இந்த மாஃபியா கும்பல் பல சிறுமுதலீடடுத் தயாரிப்பாளர்களையும் திரைப்படங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடக்கும் அநியாயங்கள் சொல்லில் அடங்காதவை. சமூகப் பொறுப்புள்ள / உணர்வுள்ள எந்தவொரு கலைஞனும் இந்தக் கும்பலுக்கு உடன்படமாட்டான். துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் அப்படி எந்தவொரு கலைஞனும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்சினிமாவில் தமிழை அழிக்கவே உருவான கூட்டம் சன் குழுமம். ரகுமானில் இசையில் தமிழைத் தேடவேண்டியிருக்கின்றது. எப்படியும் விளம்பரத்தினால் இந்தப் படத்தையும் 4 வருடத்துக்கு ஓட்டிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்லும் கூற்றோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன் மாதவராஜ். ரஜினி என்ற நடிகனின் ரசிகன் என்பதைத்தாண்டி அறுவெறுப்பய் பார்க்கிறேன் இந்த ஆர்ப்பாட்டத்தையும், அதிகார வர்க்கத்தின் கூத்து கும்மாளத்தையும்.

    படம் எடுக்க செலவு செய்ததில் கூட ஒரு லாஜிக் இருக்கு மாதவராஜ் ஆனால் அதன் கேசட் வெளியீட்டு விழாவில் பிரமாண்டம் என்ற பெயரில் ரஜினி காந்த என்ற சூப்பர்ஸ்டார் கூடா சாதரணானாய் தன்னுடைய நடிப்புத் திறமையையெல்லாம் பண பலம் கொண்ட அதிகார வர்க்கத்தின் காலடியில் வைத்து விட்டு கைகட்டி நின்றதை பார்த்தவுடன் சிர்ப்பு தான் வந்தது எனக்கு.

    யார் இந்த மாறன்கள்...20 வருடங்களுக்கு முன்னால் இவர்களின் ஆளுமை என்ன? இன்று இவர்களின் ஆளுமை என்ன? பற்றாக்குறைக்கு தமிழக முதல்வரின் வாழ்த்துசெய்தி வேறு கேசட் வெளியீட்டு விழாவில்...


    ஏன் இந்த குழைச்சல்...அரும்பாடு பட்டு நடித்த தம்பி ரஜினியை வாழ்த்துகிறேன் என்கிறாரே தமிழக முதல்வர்...அரும்பாடு படும் வெயிலில் ரோடு போடும், கட்டிடம் கட்டும், நாற்று நடும் தமிழக பிரஜைகளை எல்லாம் என்னவென்று சொல்வது....


    உங்களின் கட்டுரையோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்...மாதவராஜ் அண்ணா!

    பதிலளிநீக்கு
  4. I have some disagreements, but in general, I agree with your opinion. Particularly the phrases like "just 150 crore" is very insulting..

    பதிலளிநீக்கு
  5. சங்கரின் இந்த so called பிரமாண்ட படங்களை விதைத்தது தமிழின் தயாரிப்பாளர்கள்தான். ஏதோ ஒரு குயில் என்ற பெயரில் ஜனரஞ்சக சினிமா எடுக்க வந்தவரைச் ஜனவஞ்சக சினிமா எடுக்க வைத்தது கே.டி. குஞ்சுமோன் போன்ற தயாரிப்பாளர்கள். அவர்களையும் சாடவேண்டும்

    பதிலளிநீக்கு
  6. உங்கள் எரிச்சலும் ஆதங்கமும் உங்களின் பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் என் போன்ற வாக்காளனுக்கும், ரசிகனுக்கும் எந்திரனின் வெளியீடு தேதிதானே முக்கிய கவலையாக இருக்கிறது.

    எங்களுக்கு அணு ஆயுத ஒப்பந்தட்டிலோ, காமன் வெல்த் விளையாட்டில் நடந்த ஊழலிலோ, முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரளா இழைக்கும் கொடுமையிலோ ஏற்படும் ஆர்வத்தை ஈர்ப்பை விட எந்திரனில் ரஜினி பேச இருக்கும் பன்ச் வசனங்களிலும், பாடல் காட்சிகளிலும் தான் ஆர்வம் இருக்கிறது.

    ஏழு கோடி மக்களும் எப்படி ஜெண்டில்மான், காதலன், இந்தியன், சிவாஜி, முதல்வன், அந்நியன், ஜீன்ஸ் போன்ற படங்களை நூறு நாட்கள் ஓட வைத்தோமோ அதே போல இதையும் ஓட வைத்து விடுவோம்.

    இப்போதே மாயாஜால் தொலை பேசி பிசி ஆக தொடங்கி விட்டது.
    ரஜினியின் , ரஹ்மானின் படத்தை புறக்கணியுங்கள் என்று கூறி வாக்குக்களை இழக்க கொடநாட்டு தலைவியும், கம்முனிஸ்ட் கூட்டணியில் உள்ள வைகோவும் தயாராக இல்லை என்பதை சின்ன குழந்தை கூட சொல்லி விடும்.

    நல்லகண்ணுவும், தா பாண்டியனும் பகிரங்கமாக எந்திரனை எதிர்த்து உண்ணாவிரதம், போராட்டம் நடத்தலாமே

    பதிலளிநீக்கு
  7. நன்றி வினையூக்கி!

    திருத்தி விட்டேன்.

    பெயர்தான் வித்தியாசம். மற்றபடி ஒன்றுதானே...:-)))))

    பதிலளிநீக்கு
  8. மாதவராஜ் அண்ணா,

    வழக்கம்போலவே மொத்த வாக்கியத்தையும் சொல்லாமல் முதல் இரண்டு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அழகாக சிலம்பம் ஆடியிருக்கிறீர்கள்.

    ரஜினி சொன்னது இதுதான் - “இந்தத் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் சரித்திரம் படைக்கப்போகும் சினிமா. ஜஸ்ட், 150, 160 கோடியில பிரம்மாண்டமா எடுத்ததுக்காக மட்டும், இது சரித்திரம் படைக்கும்னு சொல்லல.”

    இங்க ஜஸ்ட் என்பது பிரம்மாண்டத்துக்காக மட்டும் என்ற அர்த்தத்தில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, ஜஸ்ட் 150 கோடி என்று 150 கோடிப் பணத்தை குறைவாகக் குறிப்பிடும் படி உபயோகப் படுத்தப்படவில்லை.

    பதிலளிநீக்கு
  9. சுரேஷ்கண்ணன் நான் மாறன் சகோதரர்கள் செய்து வரும் தவறுக்கு வக்காலத்து வாங்க வில்லை. மாறன் சகோதர்கள் பதினைந்து வருடமாக இதை செய்து வருகின்றனர். எந்திரன் முன்பு வரை அவர்கள் நியாயவான் களாய் இருந்தது இல்லை. திமுக கூட்டணியில் இருந்த பொழுது ஒரு முறையாவது இது பற்றி கம்யூனிஸ்ட் தலைவர்கள் கண்டித்தது உண்டா.

    சட்டமன்ற நாடாளுமன்ற எண்ணிக்கை, இடம் பற்றி தான் அவர்களுக்கு அக்கறை இருந்ததே தவிர, கலை, ஊடகம் சந்தை சீரழிக்கப் படுகிறது என்ற அக்கறை இருந்தது இல்லை.

    இவர்களுக்கு எதிர் ஊடகமான ஜெயா டி வியின் நிகழ்ச்சிகள் கொடுமையிலும் கொடுமை.

    பதிலளிநீக்கு
  10. எந்திரன் குறித்த எனக்கு உள்ள மிகப் பெரிய கவலை இது ஒன்றுதான்.

    செப்டம்பர் மூன்று முதல் பத்து நாட்களுக்குள் மூவாயிரம் விமர்சனப் பதிவுகள் இங்கே வந்து குவிந்து விடும். பிற செய்திகள் நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எந்திரன் அலையில் அடி பட்டு ஓடி விடும்.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பதிவில் உள்ள மையக் கருத்தில் உடன்படுகிறேன்.

    அழகாகப் பல படங்கள் வெளியாவதற்கே இடமில்லாமல் நிற்கின்றன.

    அது மேலும் சோகமானது.

    பதிலளிநீக்கு
  12. ///மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும்” ///

    15 ஹெலிகாப்டர்களில் ஜ்ட்ஜ்கள் இருக்க 25 ஹெலிகாப்டர்களில் படமாக்கப் படவேண்டும் என்றார்.

    பாருங்க 4 மணிநேரம் செலவழிச்சு நிகழ்ச்சியை நாம பாக்கச் செய்த வியாபார உத்தி தவிர்க்கமுடியுமா.

    வேலை மெனக்கெட்டு பிரம்மாண்டத்தைப் பார்க்கத்தானே செய்தோம் மாதவராஜ்

    பதிலளிநீக்கு
  13. அவர்களின் கொள்கை .
    "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..."

    பதிலளிநீக்கு
  14. ஒன்று மட்டும் நிச்சயம்.பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவரும் படங்கள்,நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த படங்கள் தோல்வியையே சந்தித்து வந்துள்ளன.ஆனால் ஷங்கர் ஜெயித்து விடுவார் என்றே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  15. சக நடிகர் பிரகாஷ் ராஜைப்போல்,பொறுப்புடன் நல்ல கதைகளுக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் ரஜினி என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  16. இந்த பிரமாண்டங்கள் உருவாகி வருவதற்கு 3, 4 வருடங்கள் போவதால் பரவாயில்லை. ஏதோ சில நல்ல படங்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் தப்பித்துக்கொள்கின்றன.

    பதிலளிநீக்கு
  17. பழைய இந்தி படம் ‘மன்ஜில்’ - அமிதாப் நடித்தது (ரிம் ஜிம் கிரே சாவன் பாடல் உள்ள படம்) - அமிதாப் சிறு தொழில் வைத்திருப்பார் - அவரை பெரிய முதலளிகள் விலைக்கு வாங்கி அவரையே வேலைக்கு வைக்க நினைப்பார்கள் - அவர் விட்டு கொடுக்க மாட்டார் அதனால் அவருக்கு கீழ் வேலை பார்ப்பவரை காச கொடுத்து பெரு முதலாளிகள் இழுத்து தன் பக்கம் சாய்த்து அமிதாப்புக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள்.

    அந்த கதை தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு போல

    பதிலளிநீக்கு
  18. அருமையான, ரொம்ப அவசியமான இடுகை, தோழர் மாதவராஜ். என்ன தான் பேசினாலும், எழுதினாலும் இந்த படத்தையும் முதல் நாள் ஆயிரம் ரூபாய் கொடுத்து பார்த்தே தீருவேன் என்பவர்களும் இருக்கிறார்கள் / இருப்பார்கள்.

    இது போல, சக பதிவர் தீபா எழுதிய ஆங்கில இடுகையைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன். "நிஜ வாழ்வை பிரதிபலிக்கும் படங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, மூன்று மணி நேரம் பொழுது போக்க வேண்டும்" என்பதே பெரும்பாலோனோரின் பதிலாக இருந்தது.

    ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நேற்றைய இசை வெளியீடு நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. குமட்டும் அளவுக்கு தனி மனிதப் புகழ்ச்சி, "கார்ட்டூன் போடு"-ன்னு அனத்திய குழந்தையின் வேண்டுகோள் இம்சையாகத் தோன்றவில்லை, ரிமோட் நீயே வைச்சுக்கோ-ன்னு போயிட்டேன்.

    பதிலளிநீக்கு
  19. சரியான நேரத்தில் மிகச்சரியான எச்சரிக்கை.இது இன்னொரு சகலகலா வல்லவன்.ரசனையைத்
    திசை திருப்புகிற மோசடி.இதில் என்ன கொடுமை என்றால் இதையும் நாம் கலை என்றே சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. Sir,
    I agree with your thoughts .....but that is how the SYSTEM works...i mean the SUN PICTURES....Cinema Field is a business...if SUN pictures is spending 150 crores..they will aim for 200 crores Profit.for that they have do all these stuffs to make people come to theater..i don't think we can change the SYSTEM...we have to live with it..

    பதிலளிநீக்கு
  21. இதே மாதிரி இடுகை நான் சிவாஜிக்கு எழுதினேன்..திண்ணை இணைய இதழில்..சிவாஜியைப் புறக்கணியுங்கள் என்று.. இன்று என்னை தவிர அனைத்து தமிழனும் அதைப் பார்த்திருப்பார்கள் என்று அறிகிறேன்.. நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நடந்துவிடாது..ஊத்திக்கிறதுக்குனே ஒரு படம் பிளான் பண்ணி எடுக்கிறது என்றால் அது எந்த்ரன் தான்.. சிவாஜி வெளியிட்ட தென்மாவட்ட அனைத்து திரை அரங்குகளும் நஷ்ட்த்தைத் தான் சந்தித்தன என்பது தான் உண்மை

    பதிலளிநீக்கு
  22. இந்த மாஃபியா கும்பல் பல சிறுமுதலீடடுத் தயாரிப்பாளர்களையும் திரைப்படங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடக்கும் அநியாயங்கள் சொல்லில் அடங்காதவை. சமூகப் பொறுப்புள்ள / உணர்வுள்ள எந்தவொரு கலைஞனும் இந்தக் கும்பலுக்கு உடன்படமாட்டான். துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் அப்படி எந்தவொரு கலைஞனும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.........உங்கள் அனைவரது கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன்....

    பதிலளிநீக்கு
  23. எந்திரன்குறித்த அபாயச் சங்கை முன்கூட்டியே மிகச் சரியாக முன் கூடியே ஊதி எச்சரித்து விட்டீர்கள் தமிழில் சில நல்ல படங்கள் வந்து மக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு அங்கிகரிக்கும் சூழ் நிலை உருவாகும் [போதெல்லாம் இந்த வியாபார விஷ வூசிகள் பிரம்மாண்டமான பிற்போக்கான
    மதிமயக்கும் படங்களை எடுத்து மக்கள் ரசனையைப் பாழ் படுத்தி விட்டு தாங்கள் கோடிகோடியாய் மக்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தம்ழ்த் திரை யுலகத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறார்கள் என்ன செய்ய! மக்கள் விழிப்புணர்வு பெறுவதும் அதற்காகப் பண்பாட்டுப் போராளிகள் தொடர்ந்து பாடுபடுவதையும் தவிர வேறு வழி இல்லை.. .
    எந்திரன்குறித்த அபாயச் சங்கை முன்கூட்டியே மிகச் சரியாக முன் கூடியே ஊதி எச்சரித்து விட்டீர்கள் தமிழில் சில நல்ல படங்கள் வந்து மக்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு அங்கிகரிக்கும் சூழ் நிலை உருவாகும் [போதெல்லாம் இந்த வியாபார விஷ வூசிகள் பிரம்மாண்டமான பிற்போக்கான
    மதிமயக்கும் படங்களை எடுத்து மக்கள் ரசனையைப் பாழ் படுத்தி விட்டு தாங்கள் கோடிகோடியாய் மக்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தம்ழ்த் திரை யுலகத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறார்கள் என்ன செய்ய! மக்கள் விழிப்புணர்வு பெறுவதும் அதற்காகப் பண்பாட்டுப் போராளிகள் தொடர்ந்து பாடுபடுவதையும் தவிர வேறு வழி இல்லை.. .

    பதிலளிநீக்கு
  24. மிக மோசமான கூட்டத்திடம் தமிழ் சினிமா சிக்கிக்கொண்டது.. உங்களைப்போன்றவர்கள தொடர்ந்து எழுதுவதன் மூலம் தான் ... குறைந்தபட்சம் விழிப்புணர்வையாவது ஏற்படுத்தமுடியும்..

    பதிலளிநீக்கு
  25. //.சிவாஜியைப் புறக்கணியுங்கள் என்று.. இன்று என்னை தவிர அனைத்து தமிழனும் அதைப் பார்த்திருப்பார்கள்
    என்று அறிகிறேன்.//

    எந்திரனை புறக்கணிப்பவர்களுக்கும் இதே தான்

    பதிலளிநீக்கு
  26. உங்களுடைய அற சீற்றத்தில் முழுதும் உடன்படுகிறேன் மாதவராஜ் சார். இதைப் போன்ற பிரம்மாண்ட குப்பைகளெல்லாம் தோல்வியடைய வேண்டும்.

    அதே சமயம், பொதுப்புத்தி கொண்டு மந்தையாய் திரியும் நம் தமிழ் சமூகம் அவ்வளவு எளிதில் திருந்தும் என்று தோன்றவில்லை.

    பதிலளிநீக்கு
  27. மாதவராஜ் எந்திரனை விட்டு தள்ளுங்கள்.இந்த லிங்கை பார்க்கவும்
    http://nvmonline.blogspot.com/2010/08/blog-post_08.html


    இதுபோன்ற சினிமாக்களை நான் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
    இது போன்ற படங்களை பற்றி அதிகம் நாம் பேசியும் எழுதியும் பிரபலபடுத்த வேண்டும்...

    பதிலளிநீக்கு
  28. ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் அவார்ட் என்று எல்லாம் வாங்கி விட்டு இப்படி பட்ட மாசாலா திரைப்படங்களுக்கு இசை அமைப்பது வருத்தம் அளிக்கின்றது.எத்தனையோ சிறிய பட்ஜெட் படங்கள் தரமான கதைகளுடன் வருகிறது. அவற்றுக்கு எல்லாம் இசை அமைத்தால் நல்ல தரமான பாடல்களை கேட்க கூடியதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  29. ஜஸ்ட் 150 கோடி என்றால் என்ன குறைந்து விட்டது சார்? இங்கே 150 மிலியன் கொட்டி எடுக்கவில்லையா? அதையும் உலக மக்கள் பார்க்கவில்லையே? அவதார் என்கிற குப்பைப் படத்தை இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகமெல்லாம் ஆகா ஓகோ என்று தலைமேல் வைத்துக் கொண்டாடவில்லையா? தொழில் நுட்பத்துக்கான கதையா உல்டாவா அந்தப் படத்தில் ?நீங்களே சொல்லுங்கள்.

    ஷங்கர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை - சிவாஜி படத்தை ஐந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை; இத்தனைக்கும் நான் ரஜனியின் முதல் தட்டு ரசிகன். ஷங்கர் என்பவர் ஒரு கலைஞன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சில கலைஞர்களின் பிரம்மாண்டம் மற்ற சில கலைஞர்களின் அருவருப்பாக இருக்கலாம். ஆனாலும் தன் எண்ணத்தை வெளிப்படுத்த எந்தக் கலைஞனுக்கும் உரிமை உண்டு. ரஜனிகாந்த் இன்றைக்குக் குப்பைப் படங்கள் தருவதற்குக் காரணம் ரஜனிகாந்தா? கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இதன் பின்னணி புரியும். சுஜாதா என்ற எழுத்தாளர் ரத்தக்கறை படிந்த கர்சீப் என்று எழுதிய போது ஒருபயல் அதைத் தட்டிக் கேட்கவில்லை - வாசகர்களின் ஆதரவை தவறாகப் பயன்படுத்தினார் என்று ஒருவரும் சொல்லவில்லை. காரணம் அதையும் ரசித்து மூக்கில் விரல் வைத்தவர்கள் தான் அதிகம். சினிமா வியாபாரம் சார். சந்தேகமே வேண்டாம். காசுக்காக எழுதுகிறான்; காசுக்காக நடிக்கிறான்; காசுக்காக இசையமைக்கிறான்; காசுக்காக இயக்குகிறான்; காசுக்காக படமோட்டுகிறான். காசை இழப்பது ரசிகன் மட்டுமே. ரசிகர்கள் இருக்கும் வரை கலைஞர்கள் ரசிகர் பாராட்டும் விதமாக நடந்து கொள்வது சாதாரணம்.

    பதிலளிநீக்கு
  30. ரூ.150 கோடியில் படம் உருவாக்கியாதாக கேள்வி, அதில் ~ரூ.135 கோடி நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைங்கர்களின் சம்பளம். மீதம் பாடல் ஒன்றுக்கு ஒரு கோடி, படப்பிடிப்புக்கு 3 கோடி. மற்றபடி இரடாண்டுகலாக உழைக்கும் அடிமட்ட தொழிலாளர்களுக்கு வழக்கம்போல நாமந்தான்.

    பதிலளிநீக்கு
  31. இது போன்ற பிரம்மாண்ட வியாபாரத்தால் சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்களும் , அவர்களை நம்பி இருக்கும் புதுமுக இயக்குநர்களும் பாதிக்கப்படுவார்கள்.

    பதிலளிநீக்கு
  32. //அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது.//
    எங்கே? இருக்கிறது அறிவுலகம். சினிமா நடிகர்களுக்கு கும்பிடு போடும் முட்டாள்கள் இங்கே லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் எவரும் திருந்தபோவதில்லை.

    பதிலளிநீக்கு
  33. வழக்கம்போல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் புழுதி தூற்றுகின்றனர். என்னைப் பொறுத்தவரை எனக்கும் என் குடும்பத்தினருக்கும் குடுபதிருக்கும் ஒரு மூன்று மணி நேரம் ஜாலியாக செலவிட வேண்டும்.

    யதார்த்தப் படங்கள் என்ற பெயரில் நாங்கள் வாழ்வில் தினமும் சந்திப்பவற்றை மீண்டும் திரையில் கண்டு அழுக என் மனம் விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  34. மாதவ்ஜி! நூறு ரூபாய்க்கு ரசீது வாங்கி இருநூறூ ரூபாயைக் கொடுக்கும் ஒரே தோழிற்துறை திரைப் படத்துறையாகும்.கருப்பை வெள்ளையாக்கும் வித்தை கொண்டது.சிமெண்ட் கம்பெனியில் நூறு மூடை உற்பத்தியானால் ஐம்பது மூடையை கணக்கில் காட்டுவார்கள்.மீதம் இயக்குனர்கள் வசம் போய்விடும்.அங்கிருந்து தனிக்கணக்கு ஆரம்பமாகிறது.சகலதுறையிலும் இதுதான் நியதி.இந்தப் பணம் தான் விதை.
    பேய் புகுந்த வீட்டை இடித்து புது வீடுகட்டினோம்.கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும் பிடாரி புகுந்தது என்றால் என்ன செய்ய?.....காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  35. குசேலனில் 'ஒரு பிட்டு' காட்சியில் நடிப்பைக் கொட்டி,
    அதிலும் பணத்தை அள்ளவேண்டுமென்று,
    தான் வாந்தியெடுத்த வார்த்தைகளை 'வாபஸ்' வாங்கிக் கொண்டார் -
    கர்னாடகக் காவிரிக்காக.
    'எந்திரன்' மூலமாக பணம் அள்ளுவதற்காக
    மாறன்மார்களை முகஸ்துதி செய்வார்.
    'எந்திரன்' தந்திரம் எடுபடாமல் போய்
    'பாபா' மாதிரி படுத்துக்கொண்டால்,
    மாறன்மார்கள் மூக்குச்சிந்தும்போது
    ஆறுதல் சொல்ல ஆளில்லாமல்
    அடிவாரம் சென்று
    கஞ்சாச் சாமியார்களுக்கு அடிவருடிக்கொண்டிருப்பார்.
    -புதிய பாமரன்.

    பதிலளிநீக்கு
  36. Well said. Nice article. Agree with your points. Always wondered why no-one write these kind of thoughts. Hats off to your writing. In Tamil Cinema Industry, coming days there will be Only 3 producers going to be there. Guess those 3 producers !!! All from one family. Latest news, AVM is moving out of Cinema production and planning to do only in TV going forward.

    பதிலளிநீக்கு
  37. மிகச்சரியான நேரத்தில் தேவையான ஒரு பதிவு.

    மாதவண்ணே உங்களுக்கு ஒரு ராயல் சல்யுட்...

    பதிலளிநீக்கு
  38. பேசாம நீங்க பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து எந்திரனை புறக்கணிச்சுடுங்களேன். எப்படியும் ஒரு அஞ்சாயிரம் ருபாய் நஷ்டத்தை ஏற்படுத்திடலாம். மானங்கெட்டவங்க எப்படியும் மொத நாள் பாக்க தான் போறீங்க அப்புறம் எதுக்கு இந்த சீனு.
    //உழைப்பில் என்று சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்//
    ஆமா நூத்தமது கோடி செக்கை பாங்குல கொடுத்து அப்படியே நமக்கு எந்த மாதிரி படம் வேனுன்னு சொன்னா பத்து நிமிசத்துல படத்தோட நெகட்டீவை கொடுத்துடுவாங்க

    பதிலளிநீக்கு
  39. More to it no one spoke or rather mentioned about writer Sujatha, i wish this film should not click in the box office.

    பதிலளிநீக்கு
  40. இது பணம் சம்பாதிக்கும் வேலை தான். அதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை ! இதுல உங்களுக்கு என்ன வருத்தம்னு தெரியல.

    இவ்வளவு பணம் செலவு பண்ணி படம் எடுக்குறதுக்கு பதிலா 10,00,000 ஏழைக்கு கொடுக்கலாமேன்னு தோன்றுகிறதா ? சரி...நம்ம வீட்ல 5000 ரூபாய்க்கு பட்டுப் புடவை எடுக்குறோம்...அதை வச்சி 50 ஏழைக்கு நாம துணி கொடுக்குறோமா ?
    பணம் சம்பாதிப்பதே தவறு என்று சொல்வது போல இருக்குங்க நீங்க சொல்றது !

    //நமது நிறத்தின், பண்பாட்டின், அடையாளங்களின், விழுமியங்களின், மகத்துவங்களின் மீது அப்படியொரு வன்மமும், துவேஷமும் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து இருக்கிறது. //

    இந்த ஒரு விஷயம் மட்டும் லைட்டா ஒத்துக்குற மாதிரி இருக்குங்க.. !

    பதிலளிநீக்கு
  41. எதிர்பார்ப்புகள் அதிகம், ஏமாற்றமும் அதிகம். பணமும், விளம்பரமும் வெற்றியாக நினைக்கும் வணிகக்கூட்டதில் நல்லவைகளை எதிர்பார்த்து ஏமாற வேண்டாமே!
    சமூகம் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் நாம்தான்! தூக்கி எறிவோம் குப்பைகளை! கொண்டாட வேண்டியது திறமைகளை மட்டுமே!! நிறங்களையும் சதைகளையும் அல்ல!

    பதிலளிநீக்கு
  42. பதிவின் மையக்கருத்துடன் நூறு சதம் ஒத்துப்போகிறேன். இருந்தாலும் நாம் செய்யவேண்டியது வினாயக முருகன் சொன்னதைத்தான். எந்திரனை திட்டி மூவாயிரம் பதிவும் எந்திரனைப்பாராட்டி இரண்டாயிரம் பதிவும் எழுதுவதற்கு பதில் இதை அப்படியே ஒதுக்கிவிட்டு மற்ற திரைப்படங்களைப்பற்றியே பேசலாமே.

    பதிலளிநீக்கு
  43. எதிர்ப்பது என முடிவு செய்து விட்டால் எல்லாவற்றையுமே கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கலாம்.பொதுப் பிரச்சினை சார்ந்த உங்களுடைய பெரும்பாலான பதிவுகளில் இத்தகைய தட்டையான பார்வையினையே காண முடிகிறது.

    நீங்கள் குறைசொல்லும் இவர்களின் பின்னனியை யோசித்துப் பாருங்கள்....சங்கர் 15 ஆண்டுகள் உதவி இயக்குனராய்,எடுபிடியாய் குப்பை கொட்டியவர், ரகுமான் வறுமையின் காரணமாய் பள்ளிக்கே செல்ல முடியாதவர், ரஜினி பேருந்து நடத்துனர்...

    வாழ்க்கை என்பது ஒரே வாய்ப்பு...போராடினார்கள், அனுபவிக்கின்றனர்.

    ரிஸ்க் எடுக்காம ரஸ்க் சாப்பிடமுடியாது...ம்ம்ம்ம், உங்களை மாதிரி தட்டையாக வேண்டுமானால் எழுதிக் கொண்டே இருக்கலாம்.

    பதிவில் சில கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவை...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. There is no comment against this post..thats amazing.. I agree to your point what ever you mentioned. But there are something that we need to accept. this reply doesnt mean that I support any of the crew member involved in this movie.When some one acheives a level they wont try to come out from that point. same case with Shankar. For that reason only he started his own production and trying to bringup some nice directors and talented people.As we are trying to show our country as a competetors or as equal to Hollywood industry we need to come out from our "binding boxed" thinking. Hence 1 or 2 movies releasing in this manner is acceptable. For eg. we have our Ayurvedha medicines but how many of us using it? we need solution immediately and after getting that from English Medicine we may try to start the Ayurvedha. Same way let us get a platform as a international level creative guys then bringing creatives for our cultural level would not be a big problem. Hollywood also releases movie like "You dont know Jack", "Un Thinkable", "Book of ELI" etc..

    பதிலளிநீக்கு
  45. ஆமாம், இந்த தில்லாலங்கடிகளின் லிஸ்டில் கவிப்பேயரசு வைரமுத்துவை விட்டுவிட்டீர்களே. மாஃபியா கும்பல்களுக்கெல்லாம் கொம்பு சீவிக்கொண்டிருக்கும் வேலையை இன்றைக்கு வெற்றிகரமாகச் செய்துகொண்டிருப்பவர் அவர்தானே.எல்லாப் பாடல்களையும் விஜயகாந்த் பாணியில் புள்ளிவிவரம் மட்டுமே தரும் மளிகைக் கடை சரக்குப் பட்டியலாக்கி அதை புறநானூற்றுத் தமிழில் உயிர் வழியும் உயிர் பிசையும் உயிர் சிதறும் என்று கட்டுரைகளையே பாடல்களாக்கிக்கொண்டு வெற்றிகரமான தமிழ் வியாபாரியாய்த் தம்மை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறாரே அவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்தே பார்க்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  46. What i am thinking you told that is exactly. Still i am not watching any movies from shankar except Indian

    பதிலளிநீக்கு
  47. //பேய் புகுந்த வீட்டை இடித்து புது வீடுகட்டினோம்.கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும் பிடாரி புகுந்தது என்றால் என்ன செய்ய?.....காஸ்யபன்.//

    :-)) I like this!

    பதிலளிநீக்கு
  48. அருமையான பதிவு
    உங்களின் கருத்து மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  49. பதிவின் அடிக்கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

    ஆனால் இந்த மாறன் சகோதரர்கள் இன்று நேற்றா இவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள்? இல்லை ரஜினியும் ஷங்கரும் ரஹ்மானும் போன் மாதத்திலிருந்தா பிரமாண்டம் பற்றி சிலாகிக்கிறார்கள்? என்னைப் பொறுத்தவரை ஷங்கர், ரஜினி போன்றோர் கூட ஒரு மாஃபியாதான்.

    பதிலளிநீக்கு
  50. This is absolute nonsense..... This is Survival of the fittest... writer must update to the next generation.... Now a days , good films too get good response and hence there is no wrong in having a Mass entertainer.. Except the things about kalanidhi maran, all other blames are senseless!!!!!!!!

    பதிலளிநீக்கு
  51. எச்சரித்து விட்டீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  52. தரமான சினிமா வேண்டும் என்று எழுத்தாளர் ஞானி ஒரு திட்டம் தீட்டினார். நம்மில் எத்தனை பேர் ரூபாய் ஐநூறு கட்டி அதை ஊக்குவித்தோம் (நான் இன்னும் அதில் பணம் கட்ட வில்லை)
    .

    பதிலளிநீக்கு
  53. பூமாலை க‌ட்டிய‌வ‌ர், 13000 ஆயிர‌ம் கோடிக்கு
    அதிப‌தியான‌தெல்லாம், ஆப்பிரிக்க‌ சரித்திர‌ங்க‌ளில்
    அதிச‌ய‌ம‌ல்ல‌. வறுமையில், ந‌ம‌க்கு அடுத்து இருப்ப‌வ‌ரை
    இதிலும் முந்த‌ விடுவோமா?
    1990‍லிருந்து,இருப‌தாண்டு கால‌ம்
    தொட‌ர்ந்து மத்திய‌ ச‌பையில் அங்க‌ம் வ‌கிக்கும் மாற‌ன் குடும்ப‌த்தால்
    வ‌ந்த‌து இந்த‌ செல்வ‌ம் என‌ச் சில சிறு ம‌தியினோர் செல்ல‌லாம்.
    ஆனால், கோலால‌ம்பூர் 'எந்திர‌ன்' மேடையில் அறிவாளிக‌ள்
    அனைவ‌ரும் (க‌விப்பேர‌ர‌சு,என்றும் சூப்ப‌ர்ஸ்டார், இளைய‌ க‌லைவாண‌ர்)
    'ச‌ன் குழும‌ வெற்றி' க‌லாநிதி மாறன் அவ‌ர்க‌ளின் மூளை குழ‌ந்தையால்தான்
    என்று அறைகூவின‌ர். (அடுத்த‌ ப‌ட‌த்துக்கு சான்ஸ் ரெம்ப‌ ஓப்ப‌னா)
    ஒரு நம்பிக்கை,த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் இந்த‌ கும்ப‌ல் நினைக்கும் அள‌வுக்கு
    அவ்வ‌ள‌வு கூமுட்டைக‌ள் அல்ல‌.

    பதிலளிநீக்கு
  54. மாதவராஜ்!
    நேற்றிரவு நானிட்ட இரு பின்னூட்டங்கள் இன்னமும் பப்ளிஷ் செய்யப்படவில்லை தோழர். ஏனென்று நான் அறிந்து கொள்ளலாமா? வலைக்கும் எழுத்துக்கும் சிறு குழந்தையான நான் கூட என்னை திட்டி வரும் பின்னூட்டங்களை அனுமதிப்பதுண்டு;நான் நேசிக்கும் இயக்கத்தை விமர்சிக்கும் பின்னூட்டங்களையும் அனுமதிப்பதுண்டு. நீங்கள் பிரபல பதிவர்-எழுத்தாளர்-குறும்பட இயக்குனர்-தொழிற்சங்கவாதி.நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும்.பதிலளியுங்கள் தோழர்!இந்த பின்னூட்டத்தையும் நீங்கள் மட்டறுக்க முடிவு செய்தால் hruprakash@gmail.com ற்கு மின்னஞ்சல் செய்யுங்கள் நீங்கள் நினைப்பதை.(ஒரு போதும் பொது வெளியில் அதை வைக்க மாட்டேன்;எனக்கு குறைந்த பட்ச நாகரீகங்களில் அளவற்ற நம்பிக்கை உண்டு-எந்த சூழலிலும்)

    பதிலளிநீக்கு
  55. சத்தியமான வரிகள் மாதவராஜ் சார். இன்னொன்று கவனித்தீர்களா..... அமரர் சுஜாதா பற்றி ஒருவரும் வாய்த்திறக்கவில்லை. நன்றி கேட்ட உலகமடா ராமா.... நரிகள் உலாவும் காடாடா....! இவர்கள் பண்ணும் கூத்தில் இசை ஞானியின் மதிப்புக் கூடிக்கொண்டேப் போகிறது!

    பதிலளிநீக்கு
  56. kashyapan மாதவ்ஜி! நூறு ரூபாய்க்கு ரசீது வாங்கி இருநூறூ ரூபாயைக் கொடுக்கும் ஒரே தோழிற்துறை திரைப் படத்துறையாகும்.கருப்பை வெள்ளையாக்கும் வித்தை கொண்டது.சிமெண்ட் கம்பெனியில் நூறு மூடை உற்பத்தியானால் ஐம்பது மூடையை கணக்கில் காட்டுவார்கள்.மீதம் இயக்குனர்கள் வசம் போய்விடும்.அங்கிருந்து தனிக்கணக்கு ஆரம்பமாகிறது.சகலதுறையிலும் இதுதான் நியதி.இந்தப் பணம் தான் விதை.
    பேய் புகுந்த வீட்டை இடித்து புது வீடுகட்டினோம்.கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும் பிடாரி புகுந்தது என்றால் என்ன செய்ய?.....காஸ்யபன்

    migavum arumai

    பதிலளிநீக்கு
  57. நியோ!

    என் கருத்துக்களுடன் (கருத்துக்களுடன் மட்டும்) எவ்வளவு, முரண்பாடு இருப்பினும், அதனை அனுமதித்தே வந்திருக்கிறேன். அந்த நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

    ஆனால்-
    1)தொனியும், வார்த்தைகளும் நாகரீகமற்று இருந்தால் நிச்சயம் அனுமதிப்பதில்லை.

    2) ஒரே விஷயத்தைத் திரும்ப, திரும்பப் பேசி சீண்டுவதாக இருந்தாலும் அனுமதிப்பதில்லை.

    என் கருத்துக்களுடன் முரண்படுங்கள். கோபப்படுங்கள். என்னுடன் வேண்டாமே, நண்பரே!

    பதிலளிநீக்கு
  58. உங்களது மறுமொழிக்கு நன்றிகள் தோழர் மாதவ் !

    பதிலளிநீக்கு
  59. பதிவுக்கு வாக்குகள் விழுந்த வேகமும், பின்னூட்டங்களும், பலரும் இதே மனநிலையில் இருப்பதையே குறிக்கிறது.
    சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு.

    பதிலளிநீக்கு
  60. சுரேஷ் கண்ணன்!
    அப்படி உடன்படாத கலைஞர்கள் இருக்கிறார்கள். உள்ளுக்குள் புகைந்துகொண்டு இருக்கிறார்கள்.

    சே.குமார்!
    பணத்திற்கு விலை போகிற எதுவும் சரக்கு. கலையுமா? அதுதான் என் கேள்வியே!

    வந்தியத்தேவன்!
    எத்தனை வருடமும் ஓடட்டும். ஆனால் காலத்தால் அழியாதது இது நிச்சயம் அல்ல. அதற்கான தெம்பு அசலான சினிமாவுக்கு மட்டுமே உண்டு.


    தேவா!
    மிக்க சந்தோஷம். நானும் கல்லூரி படிக்கிற காலத்தில் வெறிபிடித்த ரஜினி ரசிகன். முள்ளும் மலரும்,. எங்கேயோ கேட்ட குரல், ஜானியை என்றைக்கும் மறக்க முடியாது. ஆனால், ஓளிவட்டம் கட்டி, இன்று அவர் பேசுவது, செய்வது எல்லாமே அருவப்பானவை.

    இந்த மாறன்கள தமிழ்ச்சமூகத்திற்கு மட்டும்ல்ல, மனிதகுலத்துக்கே எதிரானவர்கள். அவர்களுக்கு எந்திரன்களே முக்கியம். மனிதர்கள் அல்ல!

    அதுசரி!
    நீங்கள் நிறைய சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன். அந்த ஜஸ்ட்டுக்கு பலர் புது விளக்கம் கொடுக்கலாம். ஆனால் ரஜினி யார் என்பதையும், கலாநிதி மாறன் யார் என்பதையும் தெளிவாக உணர்த்திய வார்த்தை!

    கிருத்திகன்!
    ஆமாங்க. குஞ்சுமோன், ஆரம்பித்த வினை இது.

    பதிலளிநீக்கு
  61. நாட்டுல பல்லாயிரம் கோடி ஊழல் பண்றவனை விட்டுட்டு சினிமாகாரனையும் சன் டிவியையும் குறை சொல்லுங்க... நன்கொடை கேக்குற கம்யூனிஸ்ட் தலைவர்கள் lancer கார்ல வலம் வருவது எப்பூடி தோழரே? உழைப்பில் வந்ததா?மாதவராஜு ....

    பதிலளிநீக்கு
  62. ராம்ஜி யாஹூ!
    உங்கள் அரசியல் தெளிவாய்த் தெரிகிறது. நன்றி.

    முகிலன்!
    நீங்கள் என்ன சொன்னாலும், அந்த ‘ஜஸ்ட்’ மிகக் கேவலமானது. உங்களையும் என்னையும் கேவலப்படுத்துவதாகவே இருக்கிறது.

    ச.செந்தில்வேலன்!
    உண்மைதான். மிக்க நன்றி.

    மதுமிதா!
    உண்மைதான்.நீங்க சொல்வது. இந்தப் பதிவே என் மனைவி சொல்லி எழுத்யதுதான்.

    தில்லை!
    சரியாய்ச் சொன்னீர்கள். உங்கள் கோவம் மிக நியாயமானது.

    சி.பி.செந்தில்குமார்!
    நாம் தோற்றுப் போவோம் என்கிறீர்களா?


    சின்னப்பயல் !
    அவர் அதையெல்லாம் யோசிக்காத அளவுக்கு எங்கோ சென்றுவிட்டார்...:-))))))

    Podiyan!
    நீங்கள் ரொம்பவும் நல்லவர்தான்!


    nagoreismail!
    சரிதான். பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ஜோ!
    இதை எப்படி எல்லோரும் பார்க்கிறார்கள்? இதைத் தாண்டி படத்தை எப்படி பார்க்கப் போகிறார்கள். அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

    பதிலளிநீக்கு
  63. சம்பாதித்தது போதாதா.சங்கர் இனிமேல் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே இருந்தால் தமிழ் சினிமாவுக்கு இரட்டை லாபம்.அப்புறம் 300 கோடியில் படம் எடுப்பது தவறு என்பது நம் நிலைபாடல்ல.என்ன கதைக்கு என்ன செலவு என்பதுதான் கேள்வி.உமர் முக்தார் மாதிரி ஒரு படத்துக்கு 1000 கோடி செலவழித்தாலும் சரி என்போம்.

    பதிலளிநீக்கு
  64. அன்பு மாதவராஜ்

    எனது கேள்வி இதுதான், திமுகவுடன் கூட்டணியில் கம்ம்யுநிச்ட்டுக்கள் இருந்த பொழுதே, மாறன் சகோதரர்கள்(மாறனின் பிள்ளைகள்) கேபிள் தொலைக்காட்சியில் பலவகை குறுக்குவழி , கலை சேதம் செய்து கொண்டு இருந்தார்கள். அன்று நல்லகன்னுவோ, சிவபுண்ணியமோ, பாலபாரதியோ இது பற்றி கலைஞர் பேராசிரியரிடம் பேசி இருக்கிறார்களா.


    அந்த வகையில் நான் காங்கிரசார் பரவா இல்லை என்றே சொல்லுவேன். தினகரனில் மத்திய அமைச்சர் சிறந்தவர் யார் என்று சர்வே தொடங்கியவுடன், பீட்டர் அல்போன்சும், விடியல் சேகரும் உடனே கலைஞரிடம் பேசினார்கள், இந்த சர்வே கூட்டணியில் குழப்பத்தை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது, இதை தவிர்க்க அறிவுரை கூறுங்கள் என்று.

    பதிலளிநீக்கு
  65. காமராஜ்!
    நன்றி தோழா.

    ராஜ்!
    மன்னிக்கவும், சினிமா என்பது வியாபாரமல்ல. அது ஒரு கலை. வியாபாரமாக்கிவிட்டார்கள். இது குறித்துத்தான் என் கோபமே.

    வெற்றிவேல்!
    நானும் பார்க்கவில்லை. ஷங்கரின் பெரும்பாலான படங்களை நான் பார்ப்பதில்லை.

    ராஜா!
    நன்றி.

    புதுவை ஞானகுமாரன்!
    மிக்க நன்றி தோழா. சரியாகச் சொன்னீர்கள்.

    நசரேயன்!
    பரவாயில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்.

    ஸ்ரீவிசிவா!
    மக்களின் பொதுப் புத்தியை உருவாக்குவதே சன் குழுமம் போன்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறதே!

    என்.விநாயகமுருகன்!
    ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருந்தது உங்கள் பதிவைப்படித்ததும். எந்த எந்திரனின் கால் சுண்டு விரலால் அப்படம் காணாமல் போனதோ.

    ஆகாஷ்!
    அவருக்கு இசை மட்டுமே முக்கியமல்ல.

    அப்பாதுரை!
    சரிதான். அதற்காக இதைப் பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டு இருப்பதா நண்பரே! நம்மால் ஆன கூப்பாடு போடுவோமே!

    அனானி!
    இது வேறா! இவர்களின் கலைப்புத்தி, கலைச்சேவகம் எல்லாம் இதுதான்!

    பதிலளிநீக்கு
  66. வழிப்போக்கன் - யோகேஷ்
    ஆமாம்.

    மு.இரா!
    லட்சம்பேர் என குறைவாகச் சொல்லி விட்டீர்கள். அப்படி அவர்கள் இருப்பதற்கும் அவர்கள் காரணமல்ல.

    LK!
    அப்படியானால், யதார்த்தம் என்றாலே அழுகையா? நீங்கள் சினிமா பார்க்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அழுதுகொண்டா இருக்கிறீர்கள்.

    காஸ்யபன்!
    மிகச்சரியாக சொன்னீர்கள் தோழர்.

    புதிய பாமரன்!
    நேற்றைய விஷயங்களை மறக்கச் செய்தால்தானே, நாளை அவர்கள் பிழைப்பு ஓடும்!

    கார்த்தி!
    ஆமாங்க. இதைச் சொன்னால், அவர்கலுக்குத்தானே கோபம் வரவேண்டும். மற்ற சிலருக்கு ஏன் வருகிறது எனத் தெரியவில்லை.

    ரம்லா!
    பரவாயில்லை. இந்த பேத்தலை ஆயிரம் முறை உரக்கச் செய்வேன்!

    நாஞ்சில் பிரதாப்!
    நன்றி.

    Kaargi Pages!
    படித்தேன் தோழரே! தோலை உரித்து இருந்தீர்கள்.!

    தீபா!
    நன்றி.

    damildumil!
    பரவாயில்லை. என்னால் ஒரு ருபாய் நஷ்டம் ஏற்படுத்த முடிந்தாலே சந்தோஷம்தான்!

    rkananth!
    நன்றி.

    கபிலன்!
    உருப்படியான கதையை எடுங்க என்றுதான் சொல்றேன். இங்கே எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய பின்னூட்டத்தைப் பாருங்கள்.

    நந்து!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  67. ஆனந்த்!
    பெரும்பாலும் ஒதுக்கிவிடுவதுதான் வழக்கம்.
    ஆனால் ஒரு பக்கம் ‘ஆஹா’, ‘ஓஹோ’ என்று குரல் எழும்போது, இதுபோன்ற எதிர்ப்பு தேவையானதாய் இருக்கிறதே!

    பிரப்லபதிவர்!
    உங்கள் பார்வையில் தட்டையாக இருக்கலாம். கஷ்டப்பட்டார்கள், இன்று மேலே வந்தார்கள், அதனால் எப்படி வேண்டுமானாலும் மற்றவர்களை ஏமாற்ற வேண்டுமா. மக்கள் ஏமாந்து போனதால்தானே இவர்கள் இந்த நிலைக்கு வரவே முடிந்தது?

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    சுந்தர்!
    ஹாலிவுட்டைத் தானே இவர்கள் நகலெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹாலிவுட்டுக்கு வெளியேதான் அற்புதமான சினிமா இருக்கிறது.

    எண்பதுகளில் வந்த அற்புதமான சினிமாக்களின் தொடர்ச்சியை ஒரு சகலகலா வல்லவனும், முரட்டுக்காளையும் நசுக்கியது என்பதுதான் தமிழ்ச்சினிமாவின் சரித்திரம்..

    செந்தில்குமார்!
    ஆமாம். தாங்க முடியவில்லை.

    வாடாமல்லி!
    நன்றி.

    INDIA 2121!
    நன்றி.

    Mahesh!
    ஆமாம், ஆமாம்.

    Musi!
    நண்பரே! எந்திரனின் அரசியல் குறித்த உங்கள் பார்வைக்கு நன்றி.

    யாதவன்!
    நன்றி.

    ராம்ஜி யாஹூ!
    ஆனால் ஒரு டிக்கெட் ஆயிரம் ருபாய்க்கு வாங்கிப் பார்ப்போம். நான் டிவிடியில்கூட பார்க்க மாடேன்.

    வாசன்!
    இந்த நம்பிக்கை மட்டுமில்லை என்றால் இங்கு இயங்க முடியாது போலிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி தோழரே!

    M.S.E.R.K.!
    மிக்க நன்றி.

    cs!
    மிக்க நன்றி.

    அம்பிகா!
    மிக்க நன்றி.

    lakshu!
    சினிமாவைப் பற்றி பேசினாலும், இலக்கியம் பற்றிப் பேசினாலும், இந்த வம்பை வேண்டுமென்றே வந்து செய்யும் உங்கள் அரசியல் எனக்குத் தெரிகிறது. மக்களை ஏமாற்றிச் சுரண்டி, காரில் வலம் வருபவர்கள் கம்யூனிஸ்டுகளாய் இருக்க முடியாது. போதுமா!

    ராம்ஜி யாஹூ!
    நன்றாக செய்திகளைப் படியுங்கள். இந்த கேபிள் டிவி சர்வாதிகாரத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுக் கட்சிகள் குரல் கொடுத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  68. ச. தமிழ்ச்செல்வன்!

    தோழரே! மிகத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  69. சரியாக புரிந்து கொள்ளுங்கள். அன்றாடம் வாழ்வில் நடப்பதை நாம் பார்த்துக் கொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம் அதையே மீண்டும் படத்தில் பார்க்க நான் விரும்புவது இல்லை.

    பதிலளிநீக்கு
  70. "எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்"

    கனவுகளுடன் சரி.

    சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் யாரும் சினிமா உலகிற்கு வருவதாக தெரியவில்லை.

    "அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. "

    இது தேவையற்ற பதற்றம் என்றே தோன்றுகிறது. சிவாஜி படத்திற்கு எவ்வளவோ பில்டப் கொடுத்தார்கள். ஆனால் படம் பிளாப். அதைப்போலவே இந்த படத்திற்கும் பல 'பிரமாண்டங்களை' காட்டுகிறார்கள். எங்கே இந்த படமும் சிவாஜி போல் ஓடாமல் போய்விடுமோ என்பதால் இப்படி தகிடுதித்தங்களை செய்கிறார்கள். நல்ல கதை சொல்லத் தெறிந்த திறமையான புதிய இயக்குநர்களின் வளர்ச்சியை இந்த 'பிரம்மாண்டங்கள்' ஒன்றும் செய்துவிடாது. இவை வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும்.

    இப்பதிவு தங்களின் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.

    வாழ்த்துக்கள்

    மூர்த்தி

    பதிலளிநீக்கு
  71. If the purpose of the cinema is to educate the people or portrait the real life in real form, I don’t think one would question crores of money being spent for a movie, also with a lavish ceremony in a foreign country. Are they trying to evade the tax on money being settled to the artists and technicians in a foreign country? Who knows? But to show the unrealistic blemish of fiction story as real is basically fooling the people. They may get a tax break also as the power is in their hand.

    As media, especially cinema and TV are damaging the basic cultural ethos of a country, I don’t think it is wrong to question them. I feel everyone should question it.

    பதிலளிநீக்கு
  72. அன்பு மாதவராஜ்,
    உங்களின் ஆதங்கம் புரிந்து கொள்ள கூடியதே.
    ஆனால் இவற்றையெல்லாம் மாற்ற முடியும் என்றா நம்புகிறீர்கள்.
    நம் மக்களின் மன நிலை அப்படி.

    உதாரணத்திற்கு உங்களுக்கு பின்னோட்டத்தில் ஆதரவு தெரிவித்தவரில் ஒரு கணிசமான பகுதியினர் ரஜினியின் எதிர்ப்பாளர்கள்.
    இதுவே நாளை இதே குழு (கலா நிதி ஷங்கர் ரஹுமான்) கமலோடு ஒரு பிரமாண்டமான படம் செய்து அதை கண்டித்து நீங்கள் ஒரு பதிவு போட்டால், இந்த பகுதியினர் காணாமல் போய்விடுவ்ர் அல்லது உங்களுக்கு எதிராக ஏதேனும் சப்பை காட்டு கட்டுவர்.
    ஆனால் மாறாக இப்போது மவுனம் காக்கும் சிலர் அப்போது உங்களுக்கு ஆதரவாக கருத்திடுவர் காரணம் அவர்கள் கமல் எதிர்ப்பாளர்கள்.
    இதுதான் இன்றைய மாந்தரின் நிலை என்ன செய்வது சொல்லுங்கள்??

    பதிலளிநீக்கு
  73. ஒரு படம் வெளிவருவதற்கு முன்னர் அதை முன்வைத்துச் செய்யப்படுகிற விமர்சன யுக்திகள் சில சமயங்களில் அசூயையை வரவழைக்கலாம்; அது இயல்பே! ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, இன்னும் வெளிவராத ஒரு திரைப்படத்தைப் பற்றி எதிர்மறையாக எழுதுவது மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட நினைக்கிற மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. சினிமாவைத் தவிர நமக்கு வேறு வேலையே இல்லை என்று நம்மை நாமே தூற்றிக்கொள்ளுகிற நற்பணிக்கு வேண்டுமானால் இந்த இடுகை உதவும். மற்றபடி, எந்திரன் படம் எடுக்காமலே இருந்திருந்தாலும் கூட, வேறு ஏதேனும் காரணம் கிடைக்காமலா இருந்து விடப்போகிறது...? :-)

    பதிலளிநீக்கு
  74. ஒரே கூட்டம் அரசியல் அதிகாரத்தையும், தொழில்களையும், சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை ஆகிய வலுவான ஊடகங்களையும் ஒரு சேர வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் அபாயம். உலகத்தில் இருக்கும் பத்து பன்னாட்டு நிறுவனங்கள்தாம் இன்றிருக்கும் அத்தனை பெரும் ஊடக நிறுவனங்களை வைத்துள்ளன. இதற்கும் மீடியா மோனோபோலி அல்லது ஊடக ஏகபோகம் என்று பெயர். சினிமா, இசை, பத்திரிக்கை, தொலைகாட்சி, வீடியோ விளையாட்டுக்கள், பொம்மை தயாரிப்பு என பல துறைகளில் நாம் இன்று காணும் பிரபல பெயர்கள் எல்லாமே இந்த பத்து நிறுவனங்களுக்கு சொந்தம். ஸ்பைடர்மான் என்ற சினிமா வரும்போது ஸ்பைடர்மான் பொம்மைகளும், அந்த உருவம் பொறித்த டி ஷர்ட்டுகளும் கடைகளில் இறக்குமதியாகும். ஸ்பைடர்மான் படத்தில் கதாநாயகன் மக்களைக் காக்க பறந்து வந்து இறங்கும்போது பின்னணியில் பெரிதாக அமெரிக்க கொடி பறக்கும். கலை, வியாபாரம், அரசியல் என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய்.

    தமிழ் சூழலில் இப்போது மாங்காய் சீசன்..

    Vijayshankar

    பதிலளிநீக்கு
  75. தனக்கு ஆன்மீகத்தில் எல்லாம் தெரியும் என்பதைப்போல சில ஆன்மீக கருத்துக்களை பேசி தான் அஆன்மீகத்தில் அடி முட்டாள் என்பதை நிரூபிப்பார் ..
    இந்த விழாவிலும் அப்படியே ...ரஹ்மானை சித்தர், மகான் என்றெல்லாம் புகழ்ந்த இந்த முட்டாள் சித்தர்கள் கோட்டு பொதூ கொண்டும் இருப்பார்கள் விஸ்கி போட்டு கொண்டும் இருப்பார்கள் என்று போட்டானே ஒரு போடு...தனி மனித ஒழுக்கம் தான் ஆன்மீகத்தில் முதற்படி என்பது அந்த முதற்படியே தாண்டாத இந்த முட்டாளுக்கு எப்படி தெரியும்...இவன கிரிவலம் சென்றான் என்று நாட்டுல இருக்கிற எல்லா மொள்ள மாரிங்களும் திருவண்ணாமலைக்கு போய் திருவன்னமலையை நர அடிகிரானுங்க.. இவனுங்க திருந்தர வரைக்கும் நாம ஒன்னும் பண்ண முடியாது...

    பதிலளிநீக்கு
  76. உங்கல் பதிவு காலத்தின் தேவை.கண்முன்னே நடக்கும் அராஜகத்தை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவன் கலைஞனாக இருக்கமுடியாது.மீண்டும்மீண்டும் ஒரு கலைஞன் என்பதை நிரூபித்துக்கொண்டேயிருக்கிறீர்கள்.

    நல்ல படங்கள் தொடர்ச்சியாக வரும்போதெல்லாம் இதுபோன்ற குப்பைகளை இறக்குமதிசெய்வது தமிழ்சினிமாவில் புதிதல்ல. அன்று செட்டியார் பிள்ளைகள் செய்ததை இன்று மாறன் பிள்ளைகள் செய்கிறார்கள்.
    நாளை ஸ்டாலின் ,அழகிரி’பிள்ளைகள் செய்வார்கள்.இப்போதேதொடங்கியும் விட்டார்கள்கூட. ஆனால் அதையும்மீறி சிம்புதேவன்களும்,சுசீந்திரன்களும்,பாண்டியராஜ்களும் வருவார்கள் என ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  77. I read the enthiran review,If you are the one who written those i need to ask you few questions pal,

    Tell me any one actor/Director who is acting for free of cost?
    every body in cinema industry not only in cinema industry people are working for money,even you also are working for money,Not just Rajini kanth,Even A.R.Rehman is working for money,It is his personal thing to decide how much money to get for a movie.If ILayaraja does for free of charge what necessity is there that every one should be like that.

    Your comments about shankar he shows the fact which is happening around us in his movie(not all movies).Movies are just entertainment portal's .It can be used as a media to influence people.But it is just an Entertainment media thats it.You cant expect more than that.

    You are telling this Rs 150 Crores spent for this movie as big thing wat about people who more than this in the movie "A V A T A R".what is real in that movie,or what is the message you got from the movie just entertainment.If you dont understand the meaning of Science Fiction what can others do for it.

    It is not the actors or movie makers bound duty to save the country ,It is in the hands of politicians you should ask questions to them no to the actors.They just potray the script given to them.

    I am telling this In no offence Pal. Your review is your point of view.I am just conveying my point of view thats it.

    you can reach me at sekar2486@gmail.com

    பதிலளிநீக்கு
  78. Great reply "The Inferno said..."
    Really happy to read ur post. There is always opposition for the word "Change". Try to break this barrier, try to upgrade yourself. Ya, there may be negatives in this film, try to see only positive thing. Try to improve your optimistic character, strive for better.

    பதிலளிநீக்கு
  79. Dear Inferno,
    In that case we cannot criticise any product that has entered the public domain. All commodities are produced for money. Why do you choose a particular product and why do you criticise some other products? Yes it is a matter of choice and opinion as you said.
    In the case of films, they are cultural products which influence and shape the viewers' opinion. They are here not just to make money and entertain. Cultural products like these reinforce some values in the viewers. What kind of values do these mega films create? And what kind of values are created by small budget films that are really making waves in Tamil nadu now?
    By critcising, Endhiran, Mathavaraj is putting forth his view in the public domain, expressing his opinion on the kind of values such films project.
    It all boils down to what kind of values you and mathavaraj cherish? You seem to cherish the entertainment value of films. But Mathavaraj goes beyond entertainment and looks at other social and intellectual values.
    That is the point of difference.

    Dear Pal, In this, there is no need to question his knowledge of science fiction.
    Especially when you do not know him except as a blogger with certain definite world view.

    பதிலளிநீக்கு
  80. Why should cinema only reflect reality? Who sets these boundaries to cinema? Who dictates what entertainment should be and should not be?

    //இந்த “ஜஸ்ட்டில்” என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது//

    Entertainment is an essential part of human life. There is always a need for balance. Sports and entertainment is not as high a priority as food. Does that mean, borrow money from entertainment department and buy food for more people? Won't that affect the balance?

    பதிலளிநீக்கு
  81. Iyyo paavam. Unglayellam nenacha romapa paridhama iruku. You are just 80 of 100c+ irresponsible Indians.

    பதிலளிநீக்கு
  82. @ வந்தியத்தேவன் : தண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனின் ரசிகர்களுள் ஒருவனே, உன் பெயரை வாந்தியதேவன் என்று மாறிக்கொள்ளும்.

    @haters: சிவாஜி என்கிற தோல்வியை நம்பி எந்திரன் எடுத்து இருப்பதாக சொல்கிரீகளே, தசவதாரம் என்கிற வெற்றியை(???) நம்பி ஏன் மர்மயோகி எடுக்கப்படவில்லை? உங்களுக்கு லாஜிக் எல்லாம் புரிவதில்லை. கமல் படம் பார்க்கும், குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கலா (சத்தியம்மா பக்கத்துக்கு விடு ஆன்டி) ரசிகர்கள் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  83. மாதவ். உங்க மேல இருந்த மரியாதையே போச்சுங்க. மாறன் தவிர நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்தும் குற்றம் கண்டுப்பிடித்து பேர் வாங்கும் கவிஞர் ( தோழர் ) கூட்டத்தின் எச்சமே!!

    பதிலளிநீக்கு
  84. this become commmercialised.. person who have money will survay.

    Need to do good marketing for a selling a good product.

    Just leave about the Endiran ..
    how many of us know about world classic movies . but we know james bond 007, titanic , Jurasic Par etc. only big budget movies.

    we need this kind of movies also.

    just 150 croes ...
    For rajini and kalanidi maran 150 cores is like that. if you donot have a backone to ask questions that is your fault.

    Maran is doing business and he is utilzing his own resource Sun tv for publicity. I dont find any issues in that other than source of money.

    dont write any thing foe the sake of increasing number of hits.
    Some one writes about rajini he will get the good number of response. you are also utilzing it.

    sorry for writing in english as i am not gopd in tamil tying.

    பதிலளிநீக்கு
  85. இந்தியாவில் பெரும் பாவம் பணக்காரனாக இருப்பது மற்றும் திறமையான் தொழில் முனைவராக இருப்பது. ஹாலிவுட் திரைப்படங்களை அண்னார்ந்து பார்க்கும் கூட்டம் அதையே ஒரு தமிழன் செய்தால் ஏகாதிபத்தியம். நிச்சயமாக ரஜினி மற்றும் ஷங்கரின் மீதோ எந்தவொரு தனிப்பட்ட அன்பெல்லாம் கிடையாது ஆனால் இருவரும் திறமையான வியாபாரிகள் என்பதினால் மிகப்பிடிக்கும்(ஒன்லி பிஸினஸ்). மாறன் பிரதர்ஸ் மிகத்திறமையான வியாபாரிகள்,வெறும் அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு மட்டும் வெற்றி பெற முடியாது என்பதற்கு ஜெயா டிவி ஒரு உதாரணம் எனவே அவர்களின் தனிப்பட்ட திறமை அவர்களுக்கு பணத்தை குவிக்கிறது.இதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோவம்?

    பதிலளிநீக்கு
  86. இதில ரகுமான் சித்தராம்,ரஜினி மலேசியாவில் வந்து
    வாந்தி எடுத்தாரு ,என்ன கொடும சார் .பதிவு, இல்லை...
    எச்சரிக்கை மிகவும் நன்று .வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  87. "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..."

    பதிலளிநீக்கு
  88. http://bit.ly/ai8Y0a
    Enthiran Result from Preview Show
    Great Info about the songs, but movie not so encouraging.

    பதிலளிநீக்கு
  89. Madhavraj sir, nalla pesi irukinga, but my opinion is that, all cinema people are in it for business, they will do what they can to increase their profit, and today even politics is a business, and I surely believe Maran is a business man. How do you expect social responsibility from them??? They do all such things to earn profit, and we must not forget that the taste of the public has changed. Many nice films are not even noticed. How can we blame the directors and actors???? Nothing can be done unless the taste of the pulic change......and public must be aware of the happenings around...How many cares??? Anyway, its nice to see you a person from Arumuganeri where people say, "Manasatchi padi vote podanum, and they vote for the person who gives more money", talk like this.Sorry for talking about your area people like this, the mentality of peple is the same everywhere, I just meant it coz i heard these words here. Sir one more thing, in discussions that take place in colleges, students are asked to talk about films, Should films be given such importance???? It has become more than an entertainment........ its really a sad thing.

    பதிலளிநீக்கு
  90. கோடிகளை ஆயிரக்கணக்கில் இறைத்துவிட்டு மோட்டுவளையை பார்த்துகொண்டு ரிலீசுக்கு அப்புறம் ரிசல்டை பார்க்க கலாநிதி மாறன் ஒன்றும் சினிமா பட தயாரிப்பாளர் இல்லை. வியாபாரி.திறமையான வியாபாரி. உங்களுக்கு எரிச்சலோ பொறாமையோ இருந்தால் படத்திற்கு போகாதீர்கள்.அவருக்கென ஒரு பெரும் கூட்டம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.அதில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களே இருப்பார்கள்.முதலில் அவர்களை திருத்தமுடியுமா பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  91. மாதாமாதம் ஒவ்வொரு குடும்பமும் நூறு ரூபா கேபிள் மூலமா சன் குழுமத்திற்கு கொடுப்பதை நிறுத்த முடியுமா உங்களால்?

    பதிலளிநீக்கு
  92. //"எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்"

    கனவுகளுடன் சரி.

    சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் யாரும் சினிமா உலகிற்கு வருவதாக தெரியவில்லை.

    "அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. "

    இது தேவையற்ற பதற்றம் என்றே தோன்றுகிறது. சிவாஜி படத்திற்கு எவ்வளவோ பில்டப் கொடுத்தார்கள். ஆனால் படம் பிளாப். அதைப்போலவே இந்த படத்திற்கும் பல 'பிரமாண்டங்களை' காட்டுகிறார்கள். எங்கே இந்த படமும் சிவாஜி போல் ஓடாமல் போய்விடுமோ என்பதால் இப்படி தகிடுதித்தங்களை செய்கிறார்கள். நல்ல கதை சொல்லத் தெறிந்த திறமையான புதிய இயக்குநர்களின் வளர்ச்சியை இந்த 'பிரம்மாண்டங்கள்' ஒன்றும் செய்துவிடாது. இவை வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும்.//
    புதிய கனவுகளுடன் வந்து எத்தனை படத்தயாரிப்பாளர்களை பிச்சைக்காரர்களாக்கி இருக்கிறார்கள்.திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.அதில்தான் முதலீடும் செய்ய முடியும.

    பதிலளிநீக்கு
  93. மக்கள்விரோத,முதலாளித்துவ அடிவருடி ஷங்கர் ஜெண்டில்மேன் அல்ல;ஆலிவுட் சினிமாக்களைக் காப்பியடிப்பதில் முதல்வன்;பணத்தின் மீதான காதலன்;தமிழ் மக்களின் பண்பாட்டைக் கேலி செய்யும் இந்தியன்;நல்ல சினிமாவுக்கு அந்நியன்.
    சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்த தங்களுக்கு பாராட்டுகள்.இணையத்தில் வெட்டி அரட்டைஅடிக்கும் fantacy cinema அன்பர்களுக்கு இது ஒரு சவுக்கடி.

    பதிலளிநீக்கு
  94. இந்த பதிவில் உளரி கொட்டிய வயத்தெரிச்சல்காரர்களே (சிவாஜி கூட ப்ளாப்பாம்)வெரி ஸாரி படம் சூப்பர் ஹிட்.. அதவிட ஹிட்டானது படம் படு டிசண்ட் மற்றும் உள்ளுர் கலாசாரத்தில் உலக தரம்.so அழுகாம வேற வேலை இருந்தா போய் பாருங்க.

    பதிலளிநீக்கு
  95. //கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல! //

    உடன்படுகின்றேன்..... அதற்குமேல் சொல்ல இது சரியான சந்தர்ப்பம் இல்லை...

    பதிலளிநீக்கு
  96. ithu tamillukku virothamanathu illa tamillukku puthusu. kuraikalai maddum sonnal thankal periyavarkal enru ninaipavarkalai thiruthave mudiyathu. 10000 nalla visayam irunthal oru pilaiyana vidayamum irukkum. 10000 i vidduviddu onrai paarpavarkalai thiruththave mudiyathu

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!