வண்ணப் புதிர்

இலைகளை உரசியபடி வேண்டா வெறுப்பாய் மரக்கிளைகளின் ஊடே நகர்ந்த வண்ணத்துப் பூச்சி சட்டென்று விலகி தாழப் பறந்தது. சின்னச் சின்னச் செடிகளின் மீதெல்லாம் யோசித்தபடியே நகர்ந்தது.  அருகிலிருந்த பூஞ்செடிகளை நோக்கிச் சென்று அதன் பூக்களிலெல்லாம் தேடியது. பிறகு அந்த இரும்பு கேட்டின் மீது பேசாமல் உட்கார்ந்து சிறகுகளை மூடிக் கொண்டது.

அதற்கு யார் மீது, என்ன கோபம் என்று தெரியவில்லை.

Comments

12 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அருமையான கவிதை.. வாழ்த்துகள்..!

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

    ReplyDelete
  2. ................
    ................

    You will not publish my comments,then why shoud I ?

    Thks.

    ReplyDelete
  3. வேறென்ன, வூட்டுக்காரம்மா வண்ணத்தியக்கா 'பொழக்கத் தெரியாதவனே'ன்னு
    சொல்லியிருக்கும். :-)
    Jokes apart,
    வண்ணப்புதிர் கொள்ளை அழகு.

    ReplyDelete
  4. வண்ணத்துப்பூச்சிகளை எல்லாம் ஒழித்துக் கட்டிய மனிதர்கள் மீது தான்...

    ReplyDelete
  5. இயல்பான தனது செயல்பாட்டைக் கூட மனித மனங்களைப் போல் எண்ணிக் கற்பிதங்கள் செய்பவர்களை எண்ணி நொந்து போயிருக்கலாம் அந்த வண்ணத்துப் பூச்சி.

    அல்லது, கவித்துவமான தனது இயல்பு இயக்கத்தைக் கண்டும் காணாமல் போகிறவர்களை நினைத்து விசனப்பட்டிருக்கலாம்.

    மகரந்தங்களை நுகரப் போன இடத்தில், தாவரங்களின் மரபணுக்களில் நஞ்சை ஊடுருவ வைத்துக் கொண்டிருக்கும் - மனித குல விரோதிகளான லாப வெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த சிந்தனயில் மூழ்கி இருக்கக்கூடும் அந்த வண்ணத்துப் பூச்சி.

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  6. வண்ணத்துப் பூச்சிக்கு
    மனநிலை சரியில்லையா?

    புளிச்ச ஏப்பத்தில் இருக்கிறதா?

    மரம், செடிகளில்
    பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளதா?

    ReplyDelete
  7. பொன்ராஜ்!

    சென்ற பதிவுக்கு தாறுமாறான புகழ்ச்சியோடு உனது பின்னூட்டம் இருந்ததால், அதை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. எஸ்.வி.வி!
    தங்கள் பின்னூட்டத்தில் அர்த்தங்களும், ஏக்கங்களும் புதைந்துள்ளன. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. குரு!
    நன்றி.

    அரபுத்தமிழன்!
    ரசித்ததற்கு நன்றி.

    ஜோ!
    இருக்கலாம் நீங்கள் சொல்வது போல.

    விஜயராஜ்!
    ஆராய்ச்சித் துணுக்காக நான் எழுதவில்லை. :-)))

    அசோக்!
    நன்றி.

    ReplyDelete
  10. இயல் வாழ்விழந்த மனிதனைச் சொல்வதாய் எடுத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  11. இயற்கையை சீரழிக்கும் மனிதர் மீது தான் கோபம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

You can comment here