நிழற்காமம்

 

மின்சாரம் போன மழையிரவில் மெழுகுவர்த்தி ஏற்றினேன். இருந்த இருட்டெல்லாம் திரண்டு சுவற்றில் பெரும் ஆகிருதியென நிழலாடியது. என் தலையை விட அதன் கை பெரிதாய் இருந்தது. நான் அசைந்த போதெல்லாம் அதுவும் வீடு முழுக்க அசைந்தது. அருகில் போனேன். மேலும் அது பெரியதாகியது. தயங்கியபடி தொட்டுத் தடவினேன். பூதமென ஸ்பரிசம் தட்டுப்பட்டது. மயிர் கூச்செறிய சிலிர்த்துப் போய் வசமிழந்தேன். என்னை அப்படியே எடுத்து விழுங்கியது அது.

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நன்றி மாதவராஜ்... உங்கள் வருகையை சற்றும் எதிர்பார்கவில்லை என் இணையத்தில்... உண்மையாக கதை நன்றாக இருகின்றதா...

    பதிலளிநீக்கு
  2. இன்னும் நிறைய எழுதலாமே இதைப் பற்றி!

    பதிலளிநீக்கு
  3. சின்ன வயசுல நிழலை பாக்கக் கூடாதுன்னு பய முடுத்துவாங்க .இருந்தாலும் அதன் அசைவை பார்ப்பது ஒரு அழகிய விளையாட்டுத்தான் .
    சில சமயம் நிழலென நாம் நினைப்பவை நம்மையே தின்றுவிடும் .இல்லையா?

    பதிலளிநீக்கு
  4. மின்சாரமற்ற சின்ன வயசு ஞாபகம் வந்து போனதுங்க :)

    பதிலளிநீக்கு
  5. ஒரு படிமத்தை விரித்துக் கொண்டே போகையில் அது நம்மை உள்ளிழுத்து கொள்வது கடற்கரையில் கால் கீழ் நழுவும் மணல் சுகம் .. அலை திரும்பியதும் கொஞ்சம் புதைந்து

    நிழற்காமம் நிகழ்காமம் !

    :)

    பதிலளிநீக்கு
  6. தயவு செய்து நீங்கள் உங்கள் வீட்டில் INVENTOR பொருத்துங்கள்!!

    அருமையான பதிவு!!!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    http://www.thalaivan.com

    Hello

    you can register in our website http://www.thalaivan.com and post your articles

    install our voting button and get more visitors

    Visit our website for more information http://www.thalaivan.com

    பதிலளிநீக்கு
  8. மின்சாரமற்ற சின்ன வயசு ஞாபகம் வந்து போனதுங்க.

    நல்லா இருக்கு மாது சார்.

    பதிலளிநீக்கு
  9. ராசராச்சோழன்!
    கடைசியில் புரிந்துவிட்டதா, மிக்க நன்றி.

    அன்புடன் அருணா!
    ஆமாம், இன்னும் எழுதியிருக்கலாம்.

    இராமசாமிகண்ணன்!
    மிக்க நன்றி, வருகைக்கும், பகிர்வுக்கும்.

    பத்மா!
    ஆமாம். சின்ன வயதின் அற்புதங்களைச் சுமந்துகொண்டேத் திரியவில்லையென்றால், வாழ்க்கை அதன் வனப்பை இழந்துவிடும்.

    அசோக்!
    தாங்கள் மின்சாரம் வந்திருக்கிறீர்கள். நன்றி.

    நேசமித்ரன்!
    அடிமண்ணைத் தொட்டுப் பார்க்காமல் விட மாட்டீர்கள் போல!

    பதிலளிநீக்கு
  10. பா.ரா!
    மிக்க நன்றி மக்கா. ஆனால் உங்களைப் போல வராது....!

    பொன்ராஜ்!
    குசும்பா.... நன்றி.

    தலைவன்!
    மிக்க நன்றி.

    சே.குமார்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் மாதவராஜ்.

    அபியின் "ராப் பிச்சைக் கார"னுக்குப் பிறகு காமம் குறித்த மிக நல்ல பதிவு

    இரா.எட்வின்

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு..

    தொடர வாழ்த்துக்கள்


    www.narumugai.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!