விளையாட்டுச் சாமான்

train

 

நிலமெல்லாம்
வேகமெடுத்து கடக்கிறது
செடி,கொடி,மரங்களெல்லாம்
சுழன்று சுழன்று மறைகின்றன
தூரத்து மலையும்
பின்னோக்கி நகர்கிறது
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்
தலைதெறிக்க ஓடுகின்றன
குழந்தை ஒன்று
தாயின் இடுப்பில் இருந்தபடி
கையசைத்து சிரிக்கிறது.

 

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அழகா உணர்ந்து உணர்த்தி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  2. ¦Ã¡õÀ þÂøҦáõÀ þÂøÒ

    பதிலளிநீக்கு
  3. நல்ல குழந்தைப் பார்வை. அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருங்குங்க. உணர்ந்து எழுதியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  5. நட்புடன் ஜமால்!
    நரசிம்!
    அனானி!
    உமாசக்தி!
    வேத்தியன்!
    வேலன்!
    ஆதவா!

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமை.

    குழந்தையின் கையசைப்பு கண்முன்னே விரிகிறது.

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நல்லா இருக்குங்க,
    காட்சிக்கவிதையில் கிடைக்கிற சுகம் இருக்கிறதே......

    குழந்தைகள் உலகம் வியப்புகளாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியது இல்லையா

    பதிலளிநீக்கு
  8. அந்த குழந்தையை பொருத்தமட்டிலும் அது விளையாட்டு பொருள்! அவ்வளவே...


    வித்தியாசமான பார்வை..

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. இன்று உங்கள் பக்கத்தில் ரயில் பயணம் பற்றித் தான் நிச்சயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்; சரியாக!

    கவிதையில் ஒரு ஓவியமே தீட்டிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  10. இன்று உங்கள் பக்கத்தில் ரயில் பயணம் பற்றித் தான் நிச்சயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்; சரியாக!

    கவிதையில் ஒரு ஓவியமே தீட்டிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  11. முரளிக்கண்ணன்!
    அமிர்தவர்ஷினி அம்மா!
    யாத்ரா!
    ஷீ-நிசி!
    தமிழன் கறுப்பி!
    அத்திரி!
    தீபா!
    கார்த்திகேயன்!

    அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!