அசை



ஒரு அடி கூட
முன்னால் 
எடுத்து வைக்கவில்லை

காலருகே தேள்
கொஞ்சம் தள்ளி
கட்டு விரியன்
நெளு நெளுவென்று
பூரான்கள் அடுத்து

அசையாமல்
அப்படியே நின்றிருந்தான் 
அதுவே நல்லது என 

பின்னால்
ஒரு மதயானை
முன்னங்காலை தூக்கியபடி!


Comments

15 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. இப்ப ஏதாவது செய்தே ஆகணுமே...

    ReplyDelete
  2. என்னதிது இப்படிப் பயமுறுத்துறீங்க?

    ReplyDelete
  3. இரண்டு பக்கமும் பிரச்சனையா??? ஏதாவதத ஒண்ணை தேர்ந்தெடுத்துதானன ஆகணும்....

    கவிதையில ஏதோ ஒண்ணு குறையறாப்ல இருக்கு... ஒரரவேளை நமக்கு படிக்கத் தெரியலையோ????

    ReplyDelete
  4. யானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்க‌ளின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது?

    ReplyDelete
  5. தமிழன் கருப்பி!

    ரொம்பச் சரி!

    ReplyDelete
  6. ஒருவித இயலாமை உணர்ச்சியை ஏற்படுத்துகிறது உங்கள் கவிதை

    ReplyDelete
  7. வேலன்!

    ஏன் பயப்படறீங்க?

    ReplyDelete
  8. ஆதவா!

    கவிதையில் குறைவாக்கூட இருக்கலாம்.

    ReplyDelete
  9. தீபா!
    //யானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்க‌ளின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது?//


    வாழ்வில் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கும் பெரிதாய் அலட்டிக் கொள்கிறவர்கள்...

    ReplyDelete
  10. அமிர்தவர்ஷிணி அம்மா!

    தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. முரளிக்கண்ணன்!

    ஐயோ... அதிலிருந்து விடுபடணும்னுதான் இந்தக் கவிதை...

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. ////ஆதவா!

    கவிதையில் குறைவாக்கூட இருக்கலாம்.////


    ஹா ஹஹஆ,,,, சார்,,, உங்க பதில் சூப்பர்.... எனக்கு புரியலைங்கறத திமிரா சொன்னேன்.. நீங்க அதை அப்படியே மாத்தி எனக்கு ஆப்பு வெச்சுட்டீங்க..... :D :D

    தீபாவின் உங்கள் பதில்.... கொஞ்சம் புரிய வைத்ட்தது...

    ReplyDelete
  14. என்னை நான் காத்துக்கொள்ள எனக்குள் ஒரு வேகம் வந்தே ஆகவேண்டும்.பயந்து அதிலேயே நின்றுகொண்டிருந்தால் ஆபத்து எனக்குத்தான்.உந்து....முன்னேறு!

    ReplyDelete

You can comment here