அறிவிப்பு: பாலுமகேந்திரா, மிஷ்கின் புத்தகங்கள் வெளியீடு!



திரைப்பட இயக்குனர்கள் பாலுமகேந்திரா, மிஷ்கின் ஆகியோரது புத்தகங்கள் நாளை, சனிக்கிழமை வெளியிடப்படுகின்றன.  சென்னையில்,  சாலிகிராமத்தில், பிரசாத் லேபில் மாலை 6 மணிக்கு இந்த வெளியீட்டு வழா நடக்கிறது.

பாலுமகேந்திராவின்  ‘கதைநேரம் இரண்டாம் பாகத்’தில்,  ஆறு கதைகளும், திரைக்கதைகளும், குறும்படங்களும் இடம்பெறுகின்றன. இப்புத்தகத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிடுகிறார். புத்தகம் குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசுகிறார்.

மிஷ்கினின் ‘நத்தை போன பாதையில்’ புத்தகத்தில் அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிற நூறு ஹைக்கூ கவிதைகள் இடம்பெறுகின்றன.  இப்புத்தகத்தை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட, எழுத்தாளர் பிரபஞ்சன் புத்தகம் குறித்துப் பேசுகிறார்.
நிகழ்ச்சியை எழுத்தாளர் பவா.செல்லத்துரை தொகுக்கிறார்.

வாய்ப்புள்ள சென்னை நண்பர்கள் தாங்களும் கலந்து கலந்துகொள்வதோடு, தங்கள் நண்பர்களிடமும் தெரிவிக்கும்படி வம்சி புக்ஸ் கேட்டுக்கொள்கிறது.

Comments

1 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அறிவித்தலுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete

You can comment here