விட்டு விடுதலையாகாமல்...

bird in the mirror

எப்போது பார்த்தாலும்
என்னறையின் கண்ணாடியை
கொத்திக்கொண்டே இருந்தது
அந்தச் சிட்டுக்குருவி

எத்தனைமுறை விரட்டினாலும்
ஜன்னல் வழியே
அம்பென வெளியேறி
திரும்பவும் கண்ணாடிக்கே வந்தது

கண்ணாடிக்குள் சிறைபட்ட
தன்னைப்போல் ஒன்றை
விடுதலை செய்ய போராடியது

முட்டாள் குருவி
செத்துத் தொலையாமல் இருக்க
ஜன்னலை மூடினேன்

இப்போது கண்ணாடியில்
என்முகம் தெரியவில்லை
குருவியே உள்ளிருந்து
கொத்திக்கொண்டிருக்கிறது
ஜன்னலுக்கு வெளியேவும்
குருவியின் சத்தம்.

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. I am also having this experiments daily.Now I have nearly 4 "chittuKuruvikal" friends.Daily in the morning i used to put some quantitative of rice to them.It is a happy things to us.If i forget to put rice they will give sounds and remember me.My very good friends are these "Chittu kuruvikals".-Selvapriyan

    பதிலளிநீக்கு
  2. சிட்டு குருவி பறந்த பின் விம்பமும் விடுதலையாகி விட்டது

    பதிலளிநீக்கு
  3. அழகான கவிதை. இறுதி வரிகள் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !

    இதே போன்ற குருவியும், கண்ணாடி விம்பமுமான படிமத்தை கவிஞர் ஃபஹீமா ஜஹானின் 'மீட்டெடுக்க முடியாமற்போன விம்பம்' கவிதையிலும் கண்டிருக்கிறேன். ஆனால் அது வேறு உட்கருத்தினைக் கொண்டது. அதன் சுட்டியிது
    http://faheemapoems.blogspot.com/2008/07/blog-post.html

    மனங்களில் சிறகடிக்கும் பட்சிகள் எத்தனை,எத்தனை விதமாக உள்ளிருக்கும் கவிதைகளை வெளிக்கொணர்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  4. //கண்ணாடிக்குள் சிறைபட்ட
    தன்னைப்போல் ஒன்றை
    விடுதலை செய்ய போராடியது //

    இந்த கவிதையில் நீங்கள் யாரையோ சாடுவது போல் உள்ள்து.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை!!!! இதைவிட அதிகமாக எதிர்பாக்கிறோம்

    பதிலளிநீக்கு
  6. நல்லாயிருக்கு. உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசிச்சேன். திரும்பத் திரும்பப் படிச்சேன்...

    பதிலளிநீக்கு
  7. வாவ்./...

    அட போடவைக்கும் அழகான கவிதை. ஒரு அழகான கவிதைக் காட்சியை கண்ணுக்கு நிறுத்துகிறீர்கள். தன் விருப்பம் மீறியும் மனதுள் நுழையப் பார்க்கும் ஒரு காதல்////

    சிலசமயம் காதலிகள் சிந்திப்பார்களே... அட... அந்த ஜன்னலைத் திறந்துவிட்டுத்தான் பார்ப்பமே என்று!!!!

    எப்போதும் குருவிகளை அடைக்காதீர்கள்... உள்ளேயும், வெளியேயும்.....

    கலக்கல் மாதவராஜ் அவர்களே

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை!! அதைப் படிக்கும் போது எங்கள் வீட்டுச் “சொந்தக்காரக் குருவி” செய்த அட்டூழியத்தின் விளைவாக, உங்கள்
    படைப்பிலிருந்து என் “மட்டமான காப்பி” பதிவு: விட்டு விடுதலையாகாமல்...நாங்கள்!.

    உங்கள் கவிதையின் உட்கருத்தும், சொற்கோவையும் எப்பவும் போல் அருமை. நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வந்து வாசித்து கருத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.,

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!