போதி நிலா - சிறுகதை


எழுதிய முதல் சிறுகதை ’மண்குடம்’. பலரும் பாராட்டினார்கள். எழுத்தாளர்கள் கந்தர்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மைப் பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ‘இலக்கியச்சிந்தனை’ அமைப்பால் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கணையாழியின் கடைசிப் பக்கத்தில் எழுத்தாளர் சுஜாதா அந்தக் கதையைப் பாராட்டி எழுதி இருந்தார். கொஞ்சநாள் கிறுகிறுத்துத்தான் போனேன். 

ஞானப்பால்’ சிறுகதையை எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘கவிதை போலிருக்கிறதுஎன பாராட்டியதும், மீனாட்சி புத்தக நிலையத்தால் வெளிவந்த ‘இராஜகுமாரன்’ சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதியதும் என் எழுத்துக்களுக்கு கிடைத்த பேறாகவும், பெரும் வாய்ப்பாகவும் இன்றும் நினைத்துக் கொள்வேன்
 
எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, .கந்தசாமி, பொன்னீலன் நிறைந்த சபையில்தமிழ் சாகித்திய அகாதமியில்– ‘உயிரோட்டம்’ கதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்திரா பார்த்தசாரதி பக்கத்தில் வந்து அந்தக் கதையைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லி சிறப்பாக இருந்ததாகச் சொன்னது முக்கிய தருணமாக நிலைபெற்றிருக்கிறது

ஆனால் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நின்று விட்டேன்.  
   
1986 முதல் 1999 வரை செம்மலர், குமுதம், இதயம் பேசுகிறது, விசை, விழுது, திருப்பரங்குன்றம் இலக்கிய மலரில் வெளிவந்த பதினைந்து கதைகளை வம்சி பதிப்பகத்தால்போதி நிலாதொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பை இப்போது அமேசானில் வெளியிடுகிறேன்.  

இதற்காக எழுத்துப் பிழைகள் சரி செய்து கதைகளைத் திரும்பப் படிக்கிற போதுஊரும், மனிதர்களும், அந்தக் காலத்தின் வாழ்வும் மட்டுமல்ல, என் எழுத்துக்களுமே எனக்கு பிடிபட்டன. தொடர்ந்து கதைகள் எழுதத் தூண்டுகின்றன.
    
போதி நிலா சிறுகதையை அமேசானில்  வாங்க, கிண்டிலில் படிக்க புத்தகத்தை கிளிக்குங்கள்:

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!