அன்புச் சகோதரி ஆஜர்!

jayalalitha

 

“நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்”


”பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நீங்கள் எவ்வாறு தொடர்ச்சியாக விலக்குக் கோர முடியும். பொதுமக்களிடமிருந்து விலகியிருக்க நீங்கள் விரும்புவது ஏன்?”


"விசாரணை நடைபெறும் இடத்தை விமான நிலையத்திற்கு அருகில் மாற்ற வேண்டும்”


“நீங்கள் இதற்கு மேல் என்ன எதிர் பார்க்கிறீர்கள். ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்றுவிடப் போகிறீர்கள்”


“கர்நாடக மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை”


“தயவுசெய்து காரியப் பொருத்தத்தோடு நடந்துகொள்ளுங்கள். பாதுகாப்பு குறித்த கவலை எங்களுக்கும் உண்டு. உச்சநீதிமன்றம் இது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே எந்தவித பயமும் தேவையில்லை”

 

இப்படி நீண்ட கதையில் ஒருவழியாக அன்புச்சகோதரி இன்று ஆஜராகிறாராம். இங்கே  குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் பொய்களும், சால்ஜாப்புகளும்தான் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாய் இருக்கின்றன. நாடறிந்த இந்த ‘உயர் மக்களுக்குத்தான்’  எத்தனை சலுகைகள், எவ்வளவு  உரிமைகள்! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

 

வாழ்க ஜனநாயகம், வாழ்க சமத்துவம், வாழ்க சுதந்திரம்!

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அரசியல் விளையாட்டில் பொது உடமை வாதிகள் சமரசம் செய்து கொள்ளாத வரை இந்த மக்களுக்கு விடியல் வரப் போவதில்லை

    பதிலளிநீக்கு
  2. ”கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!”

    பதிலளிநீக்கு
  3. @விக்கியுலகம்!
    நன்றி.


    @suryajeeva !
    நன்றி.

    @சத்ரியன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!