Little terrorist

little terrorist

வாதுமைப் பழங்கள் பறிக்கத்தான் தில்ஷான் அந்த இராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்தான். வெறிபிடித்த மிருகமாய் ஒரு இராணுவ அதிகாரி அவனைச் சுட்டுக்கொன்றான். இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இந்த கொடூரம், இரண்டு நாட்களுக்கு முன்பு  'Littile terrorist' படத்தின் ஆரம்ப காட்சிகளின் போது நினைவுக்கு வந்தது. சில நிமிடங்களில்,  அழுத்தமாய் பார்வையாளர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அஷ்வின்குமார். பல சர்வதேச விருதுகள் பெற்றிருக்கிறது  இப்படம்.

 

கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் எல்லையையொட்டிய  பகுதி அது. வேலி தாண்டி விழுந்த பந்தை எடுப்பதற்காக ஜமால் என்னும் முஸ்லீம் சிறுவன் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து விடுகிறான். காவலர்கள் பார்த்துவிட அவன் ஓடி ஓளிகிறான். ஒவ்வொரு கணமும் பதற்றமாய் நகரும் இந்தக் குறும்படத்தின் கடைசிக் காட்சி அழகிய கவிதை.  கம்பி வேலியைத் தாண்டிய மனிதம் நம்மைப் பார்த்து புன்னகைக்கிறது. பாருங்கள்.

 

ஆனால் ஜமாலாய் இருந்தாலென்ன, தில்ஷானாய் இருந்தாலென்ன, இரக்கமற்ற இராணுவத்துக்கு அவர்கள் 'Little Terrorist' தான்.

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!