முன்பக்கம் , , , � பாரீர், பாரீர் இந்திய வளர்ச்சி பாரீர்!

பாரீர், பாரீர் இந்திய வளர்ச்சி பாரீர்!

 

  • ஒரு கிலோ அரிசியின் விலை இங்கே ரூ.40/-. ஆனால் சிம் கார்டு இலவசம்!

 

  • ஆம்புலன்சையும், போலீசையும் விட அதிவிரைவாக வீட்டிற்கு வருவது பிசா!

 

  • கல்விக்கடனை விட எளிதில் கிடைப்பது கார்க்கடன்!

 

  • சாலைப் போக்குவரத்தின் மேம்பாலங்கள் ஆறேழு வருடங்களாகியும் கட்டி முடிக்கப்படாது, ஆனால் சட்டசபை வளாகங்கள் ஒருவருடத்திற்குள்ளே கட்டி முடிக்கப்படும்.

 

பாரீர், பாரீர் இந்திய வளர்ச்சி பாரீர்!

(நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தி இது.)

Related Posts with Thumbnails

15 உரையாடல்கள் இதுவரை. நீங்களும் தொடரலாம்! to "பாரீர், பாரீர் இந்திய வளர்ச்சி பாரீர்!"

  1. //சாலைப் போக்குவரத்தின் மேம்பாலங்கள் ஆறேழு வருடங்களாகியும் கட்டி முடிக்கப்படாது, ஆனால் சட்டசபை வளாகங்கள் ஒருவருடத்திற்குள்ளே கட்டி முடிக்கப்படும்.//


    இவர்களை என்ன பெரியார்,அண்ணா,காமராஜர்,இவர்களின் வழிதோன்றல்கள் என்றா
    கருதிகிறீர்கள் இல்லை வழிதொற்றல்கள் ஆகவே இதெல்லாம் சர்வசாதரணம்.

  2. vasan says:

    அதுதானே பார்த்தேன்,
    என்ன‌டா, ம‌தாவிட‌மிருந்து இப்ப‌டியான‌ விஷ‌ய‌மா என்று.

    உங்க‌ளுக்கு வ‌ந்த‌ எஸ்எம்ஸா!!!!
    (செய்தி இருக்கிற‌து ஆனால் உங்க‌ளின் செய்தீ இல்லை)

  3. அரிசி விலை 5000 ஆயிரத்துக்கு போறப்போ செல்லே ஃபிரியா கெடைக்குமுங்க...

  4. இது மட்டும் இல்லீங்கண்ணா. இன்னும் நெறைய இருக்குது. இங்க கோவைல கட்டண கழிப்பறைக்கு போகணும்னா மூன்று ரூபாய் தரணும். ஆனா, ரேஷன் கடைல அரிசி ஒரு ரூபா தானுங்க.

    நன்றி
    http://ippadikkuelango.blogspot.com

  5. Vijayshankar says:

    One more truth:

    Power cuts for the people; 'cuts' from power (commissions) for politicians.

  6. ஆதி says:

    கல்விக்கடனை விட எளிதில் மட்டுமன்று வட்டியும் குறைவு மகிழுந்துக் கடனுக்கு...

    என்னுடைய கல்லூரிப் படிப்பிற்கு என் தந்தை பணியாற்றும் பா. கி. வங்கியில் கடன் தரவில்லை... பிறகு அங்கே கேட்டு இங்கே கேட்டு இந்தியன் ஓவர்சீசு வங்கியில் பெற்றோம்... அந்த அளவு ஏழை, எளியவர்களுக்கும் நடுத்தரப் பிரிவு மக்களுக்கும் நல்லது செய்கிறது அரசு...

  7. பென்னகரத்து வாக்காள பெருமக்கள் தெளிவாக , வளர்ச்சி பற்றி தீர்ப்பு எழுதி உள்ளார்கள்.

  8. //ஆம்புலன்சையும், போலீசையும் விட அதிவிரைவாக வீட்டிற்கு வருவது பிசா! //

    ரொம்ப ரொம்ப ரசித்த வரி.

  9. Anonymous says:

    தனியார் மயமாக்கப்பட்டு, அரசு தலையீடுகள் குறைவாக இருந்து, யூனியன்கள் இல்லாமல் இருக்கும் துறைகள் தான் இப்படி துரித சேவையை குறைந்த விலையில் அளிக்கின்றன.(பீட்சா, சிம்கார்டு, கார்க்கடன்)

    உலகின் ஜனதொகை ஆறுபில்லியன். இன்று உலகில் ஐந்து பில்லியன் செல்போன்கள் இருக்கின்றன.காரணம் என்ன? தனியார் மயம், உலகமயம்.

  10. சென்ஷி!
    நன்றி.


    aambalsamkannan!
    நன்றி.

    சந்தனமுல்லை!
    நன்றி.


    வாசன்!
    :-))))))


    க.பாலாசி!
    வேதனையையும் மீறி சிரிப்பு வருகிறது.

  11. இளங்கோ!
    அப்படியா!
    இதைவிட இந்த அவலத்தை எப்படிச் சொல்ல முடியும்?
    பகிர்வுக்கு நன்றி.


    விஜயசங்கர்!
    நன்றி.


    ஆதி!
    அதைவிட கார்க்கடன் எளிதாக கிடைக்கும்!!!!



    அன்புடன் அருணா!
    நன்றி.


    அம்பிகா!
    நன்றி.


    ராம்ஜி யாஹூ!
    நன்றி.


    காமராஜ்!
    நானும்தான்.


    அனானி!
    சரியாகச் சொன்னீர்கள்.

Post a Comment