இன்று நான் பதிவு செய்திருந்த-
இளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்
என்னும் தலைப்பில் என்ன தவறு இருக்கிறதென்று தெரியவில்லை.
1) இந்தப் பதிவு தமிழ்மணத்தின் முகப்பில் தெரியவில்லை.
2) வாசகர் பரிந்துரைப் பகுதியில் பதிவின் தலைப்பு தெரியவில்லை. ஓட்டுக்கள் மட்டுமே தெரிந்தன.
3) மறுமொழிகள் பகுதியிலும் பதிவின் தலைப்பு தெரியவில்லை. மறுமொழிகளின் எண்ணிக்கை மட்டுமே தெரிகின்றன.
விபரமறிந்தவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். மீண்டும் ஒருமுறை இதுபோல நிகழாமல் இருப்பதற்காக!
நீங்கள் தலைப்பு எழுதும் முன்னே தமிழ்மண அனுப்பு பட்டனை அழுத்தி இருக்கலாம், அல்லது உங்கள் தலைப்பின் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கல்லாம்.
பதிலளிநீக்குNo of charters for the heading might be more than maximum length set by tamilmanam
நீங்க தமிழ்மணத்துக்கே மெயில் அனுப்பி கேட்டிருக்கலாம். இப்ப தனியா தலைப்ப படிக்கறப்ப சரோஜாதேவி கதை ரேஞ்சுல யோசிக்க வைக்குது. :)
பதிலளிநீக்குசரியாகத்தான் பதிவிட்டேன் நண்பரே!
பதிலளிநீக்குவினவின்-
சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!
என்னும் தலைப்பை விட என் பதிவின் தலைப்பு பெரிதல்லவே
சென்ஷி!
பதிலளிநீக்குமன்னிக்கவும்.
அரிதாக இதுபோல நிகழ்ந்துவிடுகிறது. தலைப்பின் நீளம், "() போன்ற குறிகள் தலைப்பில் இருத்தல் போன்ற காரணங்கள் நான் அறியவந்தவை. இது என் சந்தேகம் மட்டுமே..
பதிலளிநீக்குபொறுத்துக்கொள்ளலாம், அரிதென்பதால்..
அரிதென்றால் எந்தப் பிரச்சினையுமில்லை தம்பி.
பதிலளிநீக்குநாம எதாவது தப்பு செஞ்சிருக்குமோன்னுத்தான் சந்தேகமாய்ட்டு :-))))))