சினிமா ரசிகன்

அப்போது வெளிவந்த அந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் நகரின் முக்கிய வீதியில் ஒட்டப்பட்டு இருந்தது. யாரையோ ஆவேசமாக கைகளை நீட்டி எச்சரித்துக் கொண்டு இருந்தவரின் கண்களை யாரோ பிடுங்கி இருந்தார்கள். கலவரம் எதுவும் ஏற்படுமோ என அச்சமாய்த்தான் இருந்தது. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.

இப்போது வெளிவந்த இந்த நடிகருடைய படத்தின் போஸ்டர் அதே இடத்தில் ஒட்டப்பட்டு இருந்தது. இவரது ஆண்குறியை யாரோ பிடுங்கி இருந்தார்கள்.

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நேரில் கேட்டதை விடவும்
    உக்கிரமாக இருக்கிறது பதிவு.
    ஒட்டுமொத்த யதார்த்த வாழ்க்கையின் கொடுமையைக் கண்டு பொங்கமுடியாமல் காயடித்ததில் இந்தச்சினிமாவுக்கு 100 சதப்பங்கு உண்டு.பின்ன கோபம் வரத்தானே செய்யும்.

    பதிலளிநீக்கு
  2. காமராஜ்!
    உக்கிரமாக வந்திருந்தால் சந்தோஷமே!

    குப்பன் யாஹூ!
    அப்படியா.... நான் நிறைய சென்னையில் போஸ்டகளைப் பார்த்தேனே! மற்ற ஊர்களில் அவைதான் எங்கும் அடைத்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. வாசித்த மற்ற அனைவருக்கும்!

    ஏன் இந்த மௌனம்?

    பதிலளிநீக்கு
  4. ஆண்குறியை பிடுங்கிய பின் மௌனம் சகஜம் தானே அண்ணா..

    பதிலளிநீக்கு
  5. வால்பையன்!
    கண்ணுக்கு கண் அல்ல! பழிக்குப் பழி!


    அண்டோ!
    இந்த மௌனம் சகஜமாகத் தெரியவில்லை தம்பி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!