மழையின் தாளம் கேட்குது, மனிதா மனிதா வெளியே வா....!


வெளியே மழை பெய்து கொண்டு இருக்கிறது.
உள்ளுக்குள் இந்த பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
கவிஞர் கிருஷியின் பாடல்
கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் குரலில்...


Powered by eSnips.com



கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆயிரம் முறை நன்றி!
    இந்தப் பாடலை நினைவு படுத்தியதற்கும் கேட்கச் செய்ததற்கும்!

    நேஹா கண் கொட்டாமல்(கை கொட்டி) ரசிக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  2. மாது

    மழையின் தாளம் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. மாது

    மழையின் தாளம் கேட்டது மனதினுள்ளும்

    பதிலளிநீக்கு
  4. தீபா!
    நன்றி. நேஹாவும் ரசிக்கிறாளா.... ஆஹா....!!!

    ரவிசங்கர்!
    மிக நன்றி. தாளம் போடட்டும் மனது...

    பதிலளிநீக்கு
  5. தோழா நல்ல பாடல்! மழையின் தாளம் கேட்குது....கேட்குது.... தலையும் தானே ஆடுது...ஆடுது...

    பதிலளிநீக்கு
  6. மழையின் தாளம் கேட்குது கேட்குது
    என்ற பாடல் வெறும் சொல்கட்டு அல்ல...
    அந்த தாளக்கட்டு வெறும் தாளகட்டுமல்ல ...

    பல்லாண்டுகளுக்கு முன் என் காதில் விழுந்த அந்த மழை வெள்ளம் பாயும்
    அனுபவத்தை எப்போது மழை பொழிகிற விதிகளில் நடக்க நேருகிறதோ
    அப்போதெல்லாம் எந்தக் கூச்சமும் இல்லாமல் உரக்கப் பாடிக் கொண்டே நடந்து மீண்டும் மீண்டும் பாடலின் ரசமிக்க அனுபவ உலகத்தை எனக்குள் வருஷித்துக் கொள்வதாயிற்று.

    கரிசல் குயில் கிருஷ்ணசாமி மனிதனே அல்ல, உயிரை உருக்க வந்த இசைத் தேவன் அவன்.
    அவனது 'தேடிச்சோறு நிதம் தின்று' என பாரதியின் பாடலோடு தொடங்கும் "மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டுக் கட்டி இந்த மண்ணுக்குக் கொண்டுவந்தேன்" என்ற பாடலும்,
    "அமுத மழையில் என் கவிதை நனைகிறது நிலவே கொஞ்சம் குடை பிடி" என்ற ஷாஜகான் பாடலும்,
    (பிரளயனின்) "ஊரடங்கு சாமத்தில நா(ன்) ஒருத்தி மட்டும் விழித்திருந்தேன், ஊர்க் கோடி ஓரத்திலே உன் நெனைப்பிலே படுத்திருந்தேன், காற்றடிக்கும் ஓலை எல்லாம் சலசலக்கும் உன் சிரிப்பு .. புரண்டு படுத்தாலும் பாவிமகன் உன் நெனைப்பு .." என்ற அற்புதமான பாடலும்
    மண்ணில் சாய்கிறவரை காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

    இத்தனை ஆற்றலும் குரல் வளமும் கூட அல்ல, கரிசலின் சிறப்பு, இது எதுவும் வெளிப்படாத வெகுளித்தனமான அவரது வெள்ளைப் பேச்சும், முகமலர்ந்த நகைப்பும் தான் அவரை இன்னும் நெருங்கிய தோழமைக்கு ஆளாக்குகிறது.

    அவரை ஒரு நேர்காணல் செய்யுங்களேன் மாதவ்...

    அன்புடன்
    எஸ் வி வி

    பதிலளிநீக்கு
  7. குப்பன் யாஹூ!
    ரவிக்குமார்!
    மிக்க நன்றி.

    எஸ்.வி.வி!
    கரிசல் குயிலை சரியான வார்த்தைகளோடு அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். உங்களின் நெகிழும் குரல் அப்படியே பதிவாகி இருக்கிறது. அவரை வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்பதும் என் கனவுகளில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  8. தோழமை வணக்கம். தங்களின் எழுத்துகளை பல தளங்களில் வாசித்திருந்தாலும், முதன் முறையாக இன்று வலைதளத்திலும் வாசித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மார்கழி மாசத்தின் இயற்கையைப் போல எல்லா பக்கங்களும் பசுமையாகவே இருக்கிறது. வாழ்த்துகள்
    -இரா. தங்கப்பாண்டியன்
    vaigai,wordpress.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!