சென்னை-2000

தலைக்கு மேலே சத்தமில்லாமல்
இருட்டில் மிதந்து கொண்டிருக்கிற
ஊமை மேகங்கள்
விலகி வழி கொடுக்கிறது.
உறக்கம் அறியாத தன்னுடைய
கோடானு கோடி அலைகளால்
பேரிசை எழுப்பி
வரவேற்புச் சொல்லுகிறது வங்கக் கடல்.
பெண்கள் மஞ்சள் பூசி நீராடுகிற
வெள்ளிக்கிழமையின்
இனிய காலைப் பொழுதில்
குளிர்ந்த காற்றை சுவாசித்துக் கொண்டு

நெஞ்சை நிமிர்த்தி
வீரநடை போட்டு வருகிறது உதயசூரியன்.

‘நா
ட்
டு
ப்
பூ
க்

ள்’

சு

ம்
பு
லி
ங்

ம்


வலமும் இடமும் வணிக வளாகங்கள்

செல்வச் செழிப்போடு நிமிர்ந்து நிற்க
கொழுத்த உடம்பும் கறுத்த மேனியுமாக
நெடுஞ்சாண் கிடையாகப்
படுத்துக் கிடக்கிறது அண்ணா சாலை.
நல்ல தண்ணீரை மழை வெள்ளமாக
ஆனந்தமாய் அள்ளிக் கொண்டு வந்த
அடையாறும் கூவமும்
தன்னை சாக்கடையால் நிரப்பிக் கொண்டு
புழுக்களையும் நாத்தத்தையும்
பிரசவித்துக் கொண்டிருக்கிறது.
சவரம் பண்ணாத முகம்
டீக்குடித்த உதடுகள்
பொருத்தமில்லாத
காக்கிச் சட்டை கைலி
டிரைவர் இருக்கையில் இருந்து கொண்டு
பேருந்தின் இரும்புக் கைகளைப் பற்றிக் கொண்டு
நெஞ்சில் ஏறி ஒரு மிதி
பஸ் துள்ளிக் கொண்டு கிளம்புகிறது.
தண்டவாளங்களுக்கு நேர் மேலே
தொங்குகிற மின் கம்பியை
உரசிக் கொண்டு
மக்களை துரத்திப் பிடித்து
அள்ளி அடைத்துக் கொண்டு
பயணம் செய்கிறது ரயில்.
மேம்பாலத்தின் படிக்கட்டுகளை
மிதித்துத் தள்ளிப்
பாய்ச்சலில் வருகிறது மக்கள் கூட்டம்
அவர்களை முன்னேற விடாமல்
எதிர்த்து மறிக்கிறது வாகனங்களின் உறுமல்
கண்கள் பக்கவாட்டில் திரும்புகிறது
என்ன அதிசயம்
பாதுகாப்பான மச்சு வீடு மாதிரி
ரோட்டுக்கு அடியில்
எழில் கொஞ்சும் சுரங்கப்பாதை.
நகரத்தின்
உயிர்த் துடிப்பான ஒரு வீதி
ரங்கநாதன் தெரு
ஆயிரம் ஆயிரம் பட்டணத்துக் கண்கள்
ஆர்வம் பொங்க நடந்து வருகின்றன
வியாபாரம் அங்கே விளைகிறது.
நெருக்கடிகளின் வலியை
அந்தத் தகப்பனால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை
தன் நோஞ்சான் குழந்தைகளை
முரட்டுத்தனமாக
அடித்து விரட்டுகிறது அது
புறநகர் வயல்களும் ஏரிகளும்
புறம்போக்கு நிலங்களும்
தன் மடியை விரித்து
ஏந்திக் கொள்கின்றன அவர்களை.
பட்டணம் அசுரத்தனமாக உப்புகிறது.
நகரம்
நாகரிகமான
தன் செல்லக் குழந்தைகளுக்காகத்
தன் வயிற்றில் சாக்கடைகளையும்
செப்டிக் டேங்குகளையும்
நிரப்பிக் கொள்கிறது
தன் கர்ப்பப் பையில்
கரண்ட் வயர்களையும்
டெலிபோன் வயர்களையும்
தண்ணீர்க் குழாய்களையும்
சுமந்து
தாய்மைப் பரிவோடு
காப்பாற்றுகிறது.

 

(நாட்டுப் பூக்கள் சுயம்புலிங்கம் அவர்களின் கவிதை இது. சென்னையைப் பற்றிய எனது அனுபவங்கள் அடுத்த பதிவில். )

 

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆருமையான கவிதை. கடைசி வரிகள் அட்டகாசம்.
    சென்னை பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி

    தன் செல்லக் குழந்தைகளுக்காகத்
    தன் வயிற்றில் சாக்கடைகளையும்
    செப்டிக் டேங்குகளையும்
    நிரப்பிக் கொள்கிறது
    தன் கர்ப்பப் பையில்
    கரண்ட் வயர்களையும்
    டெலிபோன் வயர்களையும்
    தண்ணீர்க் குழாய்களையும்
    சுமந்து
    தாய்மைப் பரிவோடு
    காப்பாற்றுகிறது //

    அருமை

    பதிலளிநீக்கு
  3. தங்கள் சென்னை அனுபவங்களை எதிர்நோக்குகிறேன்! கவிதை நல்லாருக்கு..பகிர்வுக்கு நன்றி! :-)

    பதிலளிநீக்கு
  4. கவிதை,

    சென்னையின்
    நிலக்குறியீடுகளில்
    சாட்டைகொண்டடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. தீபா!
    சந்தனமுல்லை!
    நன்றி. இன்று எழுதிவிட்டேன்.

    அமிர்தவர்ஷிணி அம்மா!
    மண்குதிரை!
    முத்துக்குமார்!
    காமராஜ்!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. நல்லயிருக்குங்க பகிர்வு.

    பதிலளிநீக்கு
  7. pala aandugalaaga aluthu kondirukkirathu intha ulagam intha manithargalai sumanthu kondirukkindrome endru.
    athanaal thaano avvappothu eyarkkaiyin seetrangal.
    mirugangalum, paravaikalum, entha uyirinamum seiyatha alivu seyalkalai manithan mattume seithu kondirukkiraan.

    பதிலளிநீக்கு
  8. arasiyalai saakkadai endru palar solkiraargal.
    aanaal antha saakkadaiyai uruvaakkiyathe manithan thane.

    பதிலளிநீக்கு
  9. kadavulai thedum oru koottam.
    kadavulai verukkum oru koottam.
    kadavulai illai endru sollum oru koottam.
    kadavulai kaattu endru oru koottam.
    aanaaal kadavul veliyil illai namakkul thaan irukkiraar
    unmaiyaana anbai unarvathil.

    பதிலளிநீக்கு
  10. tholvi enbathu nijam endraal vetri enbathu thotruvidum.
    vetriyai thedi sellumpothu tholvi oru thadai suvar.
    athai udaithu vittaal vetri namakkuththaan.

    பதிலளிநீக்கு
  11. kaadal enbathu naam kadanthu sellum paathaiyil ulla oru thottam.
    angeye thangi vidaamal angirukkum nam malarai parithu kondu nam payanathai thodarnthaal athu vaal naal mulukka manam veesikkondirukkum.

    பதிலளிநீக்கு
  12. manithanaal alikkappatta visayangalai pattiyalida mudiyaathu.
    ethanaiyo kaadugal, iyarkkai selvangal, vilangukal, paravaigal.
    ivai anaithaiyum alithu vittu manithan mattume ulagathil vaalnthu vida mudiyuma?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!